Just In
- 20 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உபேர் நிறுவனம் செய்த உதவிகள் பற்றிய தகவலை வெளியாகியுள்ளது.
கோவிட் 19 வைரஸ் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த வேலையில் அந்தந்த நாட்டின் மற்றும் மாநில அரசுகளுக்கு தனி நபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை தங்களின் உதவிகளை வாரி வழங்கினர். இதுமாதிரியான உதவிகளினாலயே பெரும்பாலான நாடுகளால் இக்கட்டான சூழ்நிலையிலும்கூட மிக ஆரோக்யமாக செயல்பட முடிந்தது.
மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சில நிறுவனங்களின் நேரடி உதவியினாலயே சில ஏழைகளின் வீட்டில் ஒரு வேலை பட்டினியாவது தீர்க்கப்பட்டது. அந்தவகையில், நாட்டிற்கு கணிசமான உதவியை வழங்கிய நிறுவனங்களில் உபேர் கால் டாக்சி நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் மேற்கொண்ட விலை மதிப்பற்ற உதவிகள் பற்றிய தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காலத்தில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) அளவிலான இலவச ரைடுகளை இந்நிறுவனம் வழங்கியிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் போக்குவரத்து தடையால் சிக்கலைச் சந்திக்கும் அரசு பொது ஊழியர்களுக்கு இலவச சேவையை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி, மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கியது.
இத்துடன், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் அத்தியாவசிய தேவையின்போது இலவச சேவையை வழங்க இருப்பதாக கூறியிருந்தது. இதனடிப்படையிலேயே உபேர் நிறுவனம் சுமார் ஒரு கோடி இலவச ரைடுகளை வழங்கியிருக்கின்றது. இதில், மாநிலம் மற்றும் உள்ளூர் அரசு பணியாளர்களுக்கு மட்டுமே 1,80,000 ரைடுகளை அது வழங்கியிருப்பதாக கூறியிருக்கின்றது.
இதேபோன்று, என்எச்ஏ (National Health Authority of India) உடன் இணைந்து சுகாதார ஊழியர்களுக்கு சூமார் ஒரு லட்சம் ரைடுகளை இலவசமாக அது வழங்கியிருக்கின்றது. இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவலில் உபேர் தெரிவித்திருக்கின்றது.
இதுதவிர, தலா 2 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி மருந்துகளும் இலவசமாக தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு வழங்கியதாக உபேர் கூறுகின்றது. மேலும், ரைடர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு கண்ணாடி ஷீல்டுகளை வாகனங்களைப் பொருத்தும் பணியிலும் அது ஈடுபட்டது.
இவையனைத்தையும் கட்டணமில்லா திட்டத்தின் அடிப்படையிலேயே உபேர் வழங்கியது. இதுபோன்ற ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமே கொரோனா காலத்தில் உதவும் விதமாக இந்நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழே எண்ணற்ற சிறப்பு சேவைகளை இலவசமாக அது உலகின் பல்வேறு நாடுகளில் செய்தது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் சேவையில்லா பகுதிகளில் குறைந்த கட்டணம் அல்லது இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியது. இதுபோன்ற எண்ணற்ற அத்தியாவசிய சேவைகளை உபேர் கொரோனா காலத்தில் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.