வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உபேர் நிறுவனம் செய்த உதவிகள் பற்றிய தகவலை வெளியாகியுள்ளது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

கோவிட் 19 வைரஸ் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த வேலையில் அந்தந்த நாட்டின் மற்றும் மாநில அரசுகளுக்கு தனி நபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை தங்களின் உதவிகளை வாரி வழங்கினர். இதுமாதிரியான உதவிகளினாலயே பெரும்பாலான நாடுகளால் இக்கட்டான சூழ்நிலையிலும்கூட மிக ஆரோக்யமாக செயல்பட முடிந்தது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சில நிறுவனங்களின் நேரடி உதவியினாலயே சில ஏழைகளின் வீட்டில் ஒரு வேலை பட்டினியாவது தீர்க்கப்பட்டது. அந்தவகையில், நாட்டிற்கு கணிசமான உதவியை வழங்கிய நிறுவனங்களில் உபேர் கால் டாக்சி நிறுவனமும் ஒன்றாகும்.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இந்த நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் மேற்கொண்ட விலை மதிப்பற்ற உதவிகள் பற்றிய தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காலத்தில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) அளவிலான இலவச ரைடுகளை இந்நிறுவனம் வழங்கியிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இந்நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் போக்குவரத்து தடையால் சிக்கலைச் சந்திக்கும் அரசு பொது ஊழியர்களுக்கு இலவச சேவையை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி, மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கியது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இத்துடன், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் அத்தியாவசிய தேவையின்போது இலவச சேவையை வழங்க இருப்பதாக கூறியிருந்தது. இதனடிப்படையிலேயே உபேர் நிறுவனம் சுமார் ஒரு கோடி இலவச ரைடுகளை வழங்கியிருக்கின்றது. இதில், மாநிலம் மற்றும் உள்ளூர் அரசு பணியாளர்களுக்கு மட்டுமே 1,80,000 ரைடுகளை அது வழங்கியிருப்பதாக கூறியிருக்கின்றது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இதேபோன்று, என்எச்ஏ (National Health Authority of India) உடன் இணைந்து சுகாதார ஊழியர்களுக்கு சூமார் ஒரு லட்சம் ரைடுகளை இலவசமாக அது வழங்கியிருக்கின்றது. இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவலில் உபேர் தெரிவித்திருக்கின்றது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இதுதவிர, தலா 2 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி மருந்துகளும் இலவசமாக தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு வழங்கியதாக உபேர் கூறுகின்றது. மேலும், ரைடர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு கண்ணாடி ஷீல்டுகளை வாகனங்களைப் பொருத்தும் பணியிலும் அது ஈடுபட்டது.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இவையனைத்தையும் கட்டணமில்லா திட்டத்தின் அடிப்படையிலேயே உபேர் வழங்கியது. இதுபோன்ற ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமே கொரோனா காலத்தில் உதவும் விதமாக இந்நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!

இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழே எண்ணற்ற சிறப்பு சேவைகளை இலவசமாக அது உலகின் பல்வேறு நாடுகளில் செய்தது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் சேவையில்லா பகுதிகளில் குறைந்த கட்டணம் அல்லது இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியது. இதுபோன்ற எண்ணற்ற அத்தியாவசிய சேவைகளை உபேர் கொரோனா காலத்தில் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber Spent Rs. 1 Crore On Free Rides Food Deliveries 2020 Covid 19 Pandemic Details. Read In Tamil.
Story first published: Saturday, December 19, 2020, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X