Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இங்கிலாந்து பிரதமருக்கு இவ்ளோ பெரிய அபராதமா! இந்தியால பஞ்சாயத்து கவுன்சிலருக்கு கூட போலீஸால ஃபைன் போட முடியாது
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் காவல் துறையினர் லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுள்ளன. அதுவும் அரசியல்வாதிகள் போன்றவர்கள் எல்லாம் தவறு செய்தால், காவல் துறையினர் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்னும் அளவிற்கு இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால் அரசின் உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு காவல் துறையினர் அபராதம் (Fine) விதித்த நிகழ்வு, யுனைடெட் கிங்டமில் (United Kingdom), அதாவது இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக (PM) பதவி வகித்து வருபவர் ரிஷி சுனக் (Rishi Sunak). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், ரிஷி சுனக்கின் வளர்ச்சியை இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில்தான், ரிஷி சுனக்கிற்கு தற்போது காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
எதற்காக அபராதம்?
காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் (Seatbelt) அணியவில்லை என்பதற்காகவே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் ரிஷி சுனக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது லாங்ஷயர் (Lancashire) பகுதியில், சீட் பெல்ட் அணியாமல் ரிஷி சுனக் காரில் பயணம் செய்தார். இது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி தெரிந்தது?
சமூக வலை தளங்களில் வெளியிடுவதற்காக, காரில் அமர்ந்து கொண்டு, வீடியோ ஒன்றை ரிஷி சுனக் பதிவு செய்திருந்தார். இது அரசின் திட்டம் ஒன்றை விவரிக்கும் வீடியோ ஆகும். ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது, இந்த வீடியோவில் மிகவும் தெளிவாக தெரிந்தது. இதை அடிப்படையாக வைத்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு காவல் துறையினர் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.
மன்னிப்பு கோரினார்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் காவல் துறையினர் விதித்த அபராதத்தை செலுத்த அவர் ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களின்படி, காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணியாத ஒருவருக்கு, காவல் துறையினரால் இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்க முடியும்.
கோர்ட்டுக்கு போனால் இன்னும் அதிகம்!
இந்த தொகைதான் ரிஷி சுனக்கிற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவே வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால், இந்த அபராத தொகை இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் ரூபாயாக உயர்வதற்கான வாய்ப்புகள் கூட இல்லை. போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கே அபராதம் விதித்துள்ள நிகழ்வு, சர்வதேச அரங்கில் தற்போது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவாக இருந்தால்?
இதுவே இந்தியாவாக இருந்தால், பஞ்சாயத்து கவுன்சிலருக்கு கூட, காவல் துறையினரால் அபராதம் விதிக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நாம் கற்று கொள்வதற்கு 2 முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. எப்பேர்பட்ட பதவியை வகிப்பவராக இருந்தாலும், தவறு செய்தால் அது தவறுதான் என்பது முதல் விஷயம். இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகளை போல், கடமை தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரை காக்கும்!
காரில் பயணிக்கும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். காரில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று சீட் பெல்ட். கார் திடீரென விபத்தில் சிக்க நேரிட்டால், உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதை சீட் பெல்ட் தடுக்கும். எனவே காரில் பயணம் செய்யும்போது, கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி