சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் போலீஸ் உதவிக்கு வராததால், உக்ரைன் நாட்டு பெண் மரணம்
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் போலீஸ் உதவிக்கு வராததால், உக்ரைன் நாட்டு பெண் மரணம்..!!
காவல்துறையினர் உதவி செய்ய மறுத்ததால் டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் நடைபெற்ற விபத்தில், உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் உயிரழந்தார்.

இந்தியாவின் பனிக்காலம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இதனுடைய தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது.
டெல்லி - ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த வழியாக சென்ற கார் ஒன்று தீடீரென கட்டுபாட்டை இழந்து டிவைடரில் மோதியது.

காரின் முன்பக்கம் முற்றிலும் சிதைந்த போன நிலையில், அந்த காரின் ஓட்டுநரான வைபவ் ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.
இந்நிலையில் எக்ஸ்பிரஸ் சாலைக்கான நகர்வல காவல்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

காரில் மேலும் 3 பேர் இருந்தனர், அதில் இரண்டு பெண்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். படுகாயமடைந்த போதனா கோபலோவா என்ற 20 வயது பெண் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
Recommended Video


அப்போது, சம்பவத்தை அறிந்து டெல்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலைக்கான நகர்வல காவல்படையினர் வருவதற்கு முன்னதாக, தொலைக்காட்சி நிருபர்கள் இரண்டு பேர் வந்திறங்கியுள்ளனர்.

அதில் ஒருவரான ஷிவ் சௌகான் என்ற நிருபர் பேசும்போது, விபத்தில் ஒருவர் உயிரழந்த நிலையில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.
அதில் ஒரு பெண் மிகவும் பாதிகப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் நகர்வல காவல்படையினர் வந்தனர். அவர்களிடம் உதவிசெய்ய கோரியுள்ளனர்.

விபத்தில் நடந்தவர்களை காப்பாற்றுவது தங்கள் வேலை இல்லை என்று கூறி எந்த உதவிகளையும் நகர்வல காவல்படையினர் செய்யவில்லை என்று ஷிவ் சௌகான் தெரிவித்துள்ளார்.
Trending On Drivespark:

தொடர்ந்து பேசிய அஜேந்தர் சிங் என்ற நிருபர், விபத்து குறித்து காவல்துறைக்கு பல முறை முயன்றும் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அந்த நிருபர்கள் இரண்டு பேரும் விபத்தில் காயமடைந்தவர்களை கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் காவல் துறையின் அனுமதியின்றி காயமடைந்தவர்களை அனுமதிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகங்கள் கையைவிரித்துவிட, இறுதியாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்த உக்ரைன் பெண்ணான போதனா கோபலோவா இறந்து போனார்.

தற்போது இந்த விபத்து நடந்த பகுதிக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலோக் துபே, சம்பவ இடத்தை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது மெத்தனப்போக்கை காட்டிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது பாயும் என்று துணை கண்காணிப்பாளர் அலோக் துபே கூறியுள்ளார்.

வடயிந்தியாவில் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்கி தற்போது வரை கடுமையான பனிக்காலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு சாலையே தெரியாத நிலை நிலவுகிறது.

அடர்ந்த பனிமூட்டம் நிலவும் போது சாலையில் வாகனங்களை எடுத்து செல்லாமல் இருப்பது மிக நலம். இருந்தாலும் வாகனத்தில் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் குறைந்த வேகத்தை பின்பற்றி செல்லுங்கள்.

முக்கியமாக அதுபோன்ற சூழ்நிலைகளில் செல்பவர்கள் எப்போதும் வாகன விளக்குகள் ஒளிரவிட வேண்டும். திருப்பங்கள் நிறைந்த பகுதிகளில் செல்லும் போது ஹார்னை அழுத்தி ஒலிரச்செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








