Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அமெரிக்காவிற்கு இணையான சாலைகள்... பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு... கேக்கும்போதே சூப்பரா இருக்கே!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்தியாவில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் இந்த 25 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். இந்த 25 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மத்திய அரசு ஆரம்பம் முதலே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான சாலைகள் எப்படி வழிவகுக்கும்? என்பது தொடர்பாக தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
எனவே இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டிற்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தொலைவு 1.40 லட்சம் கிலோ மீட்டர் மட்டுமே. எனவே 2025ம் ஆண்டிற்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை என்ற இலக்கை அடைய வரும் நாட்களில் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தரமான தேசிய நெடுஞ்சாலைகளின் மூலம் நமது பயணங்கள் மட்டுமின்றி, சரக்குகளை கையாள்வதும் எளிமையாகும். அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை எளிமையாகவும், விரைவாகவும் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
எனவேதான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான சாலைகளை வரும் காலங்களில் இந்தியாவிலும் பார்க்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அதே நேரத்தில் வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது என சமீப காலமாகவே மத்திய அரசு மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்தியாவில் தற்போதே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி விட்டது. மத்திய அரசு கூடுதலாக இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்கினால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
Note: Images used are for representational purpose only.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!