Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சதத்தை நெருங்கும் பெட்ரோல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!!
விரைவில் எரிபொருளின் விலை சென்சுரி அடிக்க இருக்கின்ற நிலையில் விலையுயர்வைப் பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். இதற்கு அவர் அளித்த கூல் பதிலை இப்பதிவில் காணலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை சென்சுரியை அடித்துவிட்டன. நீ மட்டும்தான் பெரிய ஆளா, நானும் விரைவில் சென்சுரியைத் தொடுவேன் என்று வெகு வேகமாக உயர்ந்து வருகின்றது டீசலின் விலை. விரைவில் இதன் விலையும் ரூ.100னை தொட இருக்கின்றது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, மக்களுக்கு பேரிடியை வழங்கும் வகையில் அண்மையில் வீட்டு சமையல் எரிவாயு (கேஸ்) விலையில் ரூ. 50னை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நிதின் கட்காரியிடம் பெட்ரோல், டீசல் விலையுயர்வை பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், "பொதுமக்கள் மாற்று எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும்" என ஒரேடியகா தனது பதிலை முடித்துக் கொண்டார்.
அமைச்சரின் இப்பதில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலையுயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மலையளவில் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஷேர் ஆட்டோ போன்ற மலிவு கட்டண போக்குவரத்தின் கட்டணத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதனால், தினசரி போக்குவரத்திற்காக ஷேர் ஆட்டோ, பேருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயல், மக்கள் விரோத செயல் என எதிர்கட்சிகளும், தன்னார்வலர்களும் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் அதிக வரியைக் கணிசமாக குறைக்க வேண்டும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இருப்பினும், மத்திய அரசு இதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி வருகின்றது. அந்தவகையிலேயே அண்மையில் மத்திய பட்ஜெட்டின்போது பெட்ரோல், டீசல் மீதான வரியினை உயர்த்தியது. தற்போது பெட்ரோலுக்கு 61 சதவீதமும், டீசலுக்கு 56 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற உச்சபட்ச வரி விதிப்பின் காரணமாகவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மலையளவு உயர்ந்து நிற்கின்றது. உள்நாட்டில் சுத்திகரிப்பு செய்து வெளிநாடுகளுக்கும் பெட்ரோல், டீசலை இந்தியா ஏற்றுமதி செய்து வருகின்றது. அவ்வாறு, இந்தியாவில் ஏற்றுமதி செய்து விற்பனைச் செய்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 62க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது.
இதேபோன்று இந்தியாவில் இருந்து எரிபொருளை கொள்முதல் செய்யும் வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. இவ்வாறு, இறக்குமதி செய்து விற்பனைச் செய்யும் நாடுகளிலேயே மிகக் குறைந்த விலையில் விற்கப்படும்நிலையில், இங்கு அநியாய கொள்ள நடப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, இந்தியாவிலும் இதன் விலை அதிரடியாக உயர்த்தப்படும். அதேசமயம், சர்வதேச சந்தையில் இதன் விலை குறையும்போது, எரிபொருள் மீதான அடிப்படை கலால் மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி அரசு உயர்த்திவிடுகின்றது.
இவ்வாறு செய்யப்படுவதானல் அதன் பலன் மக்களை சென்றுச் சேர்வதில் தடை ஏற்படுகின்றது. இதனால்தான் எப்போதும் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே காட்சியளிக்கின்றது. மேலும், பெரியளவில் இவற்றின் விலையில் குறைவு ஏற்படுவதில்லை. அதேசமயம், மத்திய அமைச்சரின் பதிலானது, அனைவரும் மின்வாகன பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்துவதைப் போன்று அமைந்துள்ளது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!