ஹேண்டா சிட்டி காரை காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ்காரர்..! வைரலாகும் வீடியோ
உ.பி. மாநிலத்தில் உள்ள சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் தன் கால் மீது கார் டயர் உரசியதற்காக அந்த காரின் கதவை போலீஸ்காரர் ஒருவர் அந்த காரின் கதவை எட்டி உதைக்கும வீடியோ வெளியாகியுள்ளது.
உ.பி. மாநிலத்தில் உள்ள சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் தன் கால் மீது கார் டயர் உரசியதற்காக அந்த காரின் கதவை போலீஸ்காரர் ஒருவர் அந்த காரின் கதவை எட்டி உதைக்கும வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பல இடங்களில் போலீசார் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தாலும், சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து தான் வருகிறது.

தற்போது உ.பி., மாநிலம் கான்பூரில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் ஒருவர் தனது காலால் எட்டி உடைத்தே ஹோண்டா சிட்டி காரை சேதப்படுத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கான்பூரில் உள்ள ஒரு பகுதியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. விபத்து காரணமாக அப்பகுதயில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை ரோட்டின் ஒரு பகுதிக்கு விட்டு விட்டு மற்றொறு பகுதியை போக்குவரத்திற்காக அனுமதித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் டிராபிக்கில் நின்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக நகர துவங்கின. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரை அங்கிருந்த போலீசார் ஒருவர் எட்டி உதைக்க துவங்கினார். முதலில் 2-3 முறை எட்டி உதைத்த போலீசார் பின்பு ஓங்கி உதைத்தில் காரின் முன்புற டோர் பகுதி சேதமடைந்தது.

எட்டி உதைத்தது போலீசாக இருப்பதால் என்ன நடந்தது.என்பது டிரைவருக்கு தெரியவில்லை. அவர் சுதாரிப்பதற்குள் காரின் டோர் சேதமாகிவிட்டது. அதன் பின் காரின் விட்டோ கண்ணாடியை இறக்கிய டிரைவரிடம் போலீசார் கடுமையான மொழியில் கண்ணு தெரியாதா? என கேட்கிறார். இந்த முழு வீடியோவை நீங்கள் கீழே பாருங்கள்
கார் டோரை போலீசார் சேதப்படுத்தியதால் எதுவும் செய்ய முடியாமல் கார் டிரைவர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். இந்தியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி சாதாரண மக்களை துன்பப்படுத்துவதற்கு இது முக்கிய உதாரணமாக உள்ளது.

விபத்து நடந்த பகுதியை அந்த கார் கடக்கும் போது அங்கிருந்த ஒரு போலீகாரர் மீது கார் டயர் லேசாக உரசியதாகவும், அதனால் ஆத்திரப்பட்ட அந்த போலீஸ் காரர் தான் காரை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறாக சிக்கலான இடங்களில்இது போன்ற சிறிய சிறிய தவறுகள் நடப்பது சகஜம் தான். இதற்காக போலீசார் செய்த செயல் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரில் வந்தவரே தவறு செய்திருந்தாலும், அவரது காரை சேதப்படுத்தும் அதிகாரம் போலீசாருக்கு கிடையாது.

ஒரு வேளை காரில் இருந்த டிரைவரும கோப்பட்டு காரை விட்டு இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் அப்பகுதியில் நிலைமை மிக மோசமாக போயிருக்கும் மேலும் அப்பகுதயில் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்து, டிராபிக்கை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரே டிராபிக்கிற்கு காரணமாக இருந்திருக்ககூடும்.

இந்தியாவில் அதிகாரத்தை வைத்து பொதுமக்களுக்கு அதிக துன்பம் தரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு சில சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும். மேலும் இவ்வாறாக செயல்படும்அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications