Just In
- 7 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரதமர் வேண்டுகோளை மீறிய இளைஞர்கள்.. கொரோனாவைவிட கடும் நடவடிக்கையால் திணற வைத்த காவல்துறை..
பாரத பிரதமர் மோடியின் வேண்டுகோளை மீறி செயல்பட்ட இளைஞர்கள் சிலரை காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் திணற வைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவைக் கண்டு நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியர்கள் பலரோ அந்த வைரஸின் தீவிரம் பற்றி அறியாமல் இருக்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் வேலையிலும் பொதுமக்கள் பலர் தங்களின் வாகனங்களில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஆகையால், அவர்களை தண்டிக்கும் விதமாக போலீஸார் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாநில அரசும் கடுமையான சில திட்டங்களை நாடு முழுவதும் இயற்றி வருகின்றன.
அந்தவகையில், மக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது வருகின்ற 31ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த வேலையில், தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மக்கள் அனைவரும் ஏப்ரல் 15 தேதி வரை வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையினால் மட்டுமே நாட்டு மக்களை காக்க முடியும் என்ற நம்பிக்கையில் அரசு இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், இந்திய மக்கள் பலர் கொரோனாவின் தீவிரத்தைப் பற்றி அறியாமல் வெளியே சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அவ்வாறு சுற்றி திரிந்ததன் காரணத்தினாலயே கோவிட்-19 வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் மாகாணத்தைக் காட்டிலும் இத்தாலியில் மிக அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் 700-க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதில், அதிகப்படியானோர் வயது முதிர்ந்தவர்களாகவும், சிறுவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலை இந்தியாவில் ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் பலர் மிகவும் அசாதரணமான சூழலில் சாதரணமாக செயல்படுவதே இதற்கு காரணமாக இருக்கின்றது.
ஆகையால், அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அண்மையில்கூட தெலுங்கான மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மக்கள் அரசு கட்டுபாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கண்டதும் சுட உத்தரவிடப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு, ஒவ்வொரு அரசும் மக்களைக் கோரோனாவில் இருந்த காக்க கூடுதல் அச்சுறுத்தலை வழங்கி வருகின்றன.
இம்மாதிரியான சூழ்நிலையில் இந்திய அரசு விடுத்திருக்கும் 21 நாள் முழு அடைப்பை (லாக் டவுண்) மீறுவோர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன்படி, நாட்டின் ஒரு சில பகுதிகளில் வாகன ஓட்டிகளின் வாகனங்களைப் போலீஸார் அடித்து நொருக்கியும், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மீது தடியடி நடத்தியும் வீடுகளுக்கு விரட்டி வருகின்றனர். தொடர்ந்து, ஒரு சில இடங்களில் அதிகபட்ச அபராத செல்லாணையும் வழங்க ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவில், கெடுபிடிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் 2 ஆயிரம் பேருக்கு போலீஸார் அதிகபட்ச அபராத செல்லாணை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இந்த அனைத்து செல்லாண்களும் கடந்த ஞாயிறன்று (ஜனதா கர்ஃபியூ) வழங்கப்படதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம், பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்கள் யாரும் இரவு வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மாலை 5 மணிக்கு மட்டும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நம் நலத்திற்காக சுய நலம் பாராமல் உழைக்கும் பொதுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீட்டை விட்டு வெளியே வந்து கைகளைத் தட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத் தவறாக புரிந்துக் கொண்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கூட்டம் கூட்டமாக சாலையில் நடமாடி கைகளைத் தட்டியும், மணியோசை ஒலித்தவாறும் சென்றனர். அதேசமயம், பலர் சாலையில் வாகனத்தை ஓட்டியவாறும் திரிந்துள்ளனர்.
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் குழப்பமும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
உலக நாடுகள் பல கொரோனாவின் தீவிரத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், இந்தியர்கள் பலர் முழுமையான தீவிரத்தை அறியாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி வருகின்றனர்.
ஆகையால், நொய்டாவில் விதியை மீறிய நபர்கள் 2 ஆயிரம் பேருக்கு அபராதச் செல்லாண்களையும், 100க்கும் அதிகமானோர் மீது எஃப்ஐஆர் பதிவையும் செய்துள்ளனர்.
இதனால், பலர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, எஃப்ஐஆர் பதிவுபெற்ற நபர்கள் பெரும் நெருக்கிடியில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முழு அடைப்பின்போது தகுந்த காரணம் இன்றி வெளி சிற்றி திரிந்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதே நிலைதான் தற்போது நாடே இழுத்து மூடப்பட்டிருக்கும் நிலையிலும் நிலவ ஆரம்பித்துள்ளது.
ஆகையால் வரும் நாட்களில் உத்தரபிரதேச அரசைப் போன்றே மற்ற மாநில அரசுகளும் அதி தீவிர நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகின்றது. ஆகையால், மக்கள் தங்களை வைரஸ் தொற்றில் மட்டுமின்றி அரசின் தீவிர நடவடிக்கைகளில் இருந்தும் காத்துக்கொள்ள தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாகியிருக்கின்றது.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!