யுடியூபில் பிரபலமாவதற்காக சிறுவர்கள் செய்த துணிச்சலான காரியம்.. வியந்துநின்ற போலீஸ் கூட்டம்!
யுடியூபில் பிரபலமாவதற்காக சிறுவர்கள் இருவர் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறி சிறிய பைக்கில் வலம் வந்துள்ளனர். இவர்கள் எதற்காக இப்படி வலம் வந்தனர் என தெரிஞ்சா நிச்சயம் நீங்க ஷாக் ஆயிடுவிங்க, போலீஸே ஒரு நிமிஷம் உறைஞ்சிட்டாங்கனா பாத்துக்கோங்களேன்..

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு நிலவி வருகின்றது. இதே நிலைதான் இந்தியாவிலும் கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து காணப்படுகின்றது. இந்நிலை வருகின்ற 14ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும் என முன்னதாக அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால், கொரோனாவின் அதி தீவிரமான பரவும் நிலை அரசின் இந்த முடிவை எப்போது வேண்டுமானலும் மாற்றும் வகையில் உள்ளது.

ஆகையல், எப்போது வேண்டுமானாலும் தேசிய ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, பல செய்தி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இதன் உண்மை நிலை வருகின்ற 14ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இருப்பினும், தற்போது ஊரடங்கு உத்தரவு தேசம் முழுவதும் நிலவி வருகின்றது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றது. இதற்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மீறிச் செல்வோர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகினறனர்.

குறிப்பாக லத்தி சார்ஜ், அபராதம், வாகன பறிமுதல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவர்கள் இருவர் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறி சிறிய ரக (சிறுவர்கள் இயக்கும்) பைக்குகளில் செல்வதைப் போன்ற காட்சிகள் யுடியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுவர்கள் இருவரும் யுடியபில் பிரபலமாவதற்காகவே இவ்வாறு ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வெளியே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் 'கிட்ஸ் பைக்' என்ற யுடியூப் சேனலை நடத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்துத்துறையும் முடங்கி கிடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமுறை என்றாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டத்தை மட்டுமே அளிக்கும். ஆனால், இப்போதைய விடுமுறை அவர்களுக்கு கடுமையான வேதனையை அளித்துள்ளது.

வெளியேவும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியும் இருக்க முடியாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே யுடியூப் சிறுவர்கள் இருவரும் தங்களின் பைக்கை எடுத்துக் கொண்டு புதிய வீடியோ வெளியிடுவதற்காக புறப்பட்டனர். அப்போது தெருவின் இறுதியில் இருந்த போலீஸார் கூட்டம் அந்த சிறுவர்களைக் கண்டதும், தடுத்து நிறுத்தினர்.

அப்போது புதிய டுவிஸ்டை ஏற்படுத்தும் விதமாக சிறுவர்கள் இருவர் தாங்கள் வைத்திருந்த ஓர் சிறிய பையை போலீஸ் மூத்த அதிகாரியிடம் வழங்கினர். அந்த பையில் ரூ. 5,000 தொகை இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஊரடங்கின்போது பசியால் வாடும் மக்களுக்கு உதவியளிக்க இந்த தொகையைப போலீஸாரிடம் அந்த சிறுவர்கள் வழங்கியுள்ளனர். இதற்காகவே அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தததாக தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் இந்த மனிதாபமான செயல் வரவேற்பளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது.
இந்த சிறுவர்கள், யுடியூபில் கூடுதல் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக இதனை வீடியோவாக எடுத்து தற்போது சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இறுதியில் உதவி புரிவதற்காக வெளியே வந்த இச்சிறுவர்கள், வீடியோவின் ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுவது போன்ற காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் ஜாலி ரைடு செல்லவில்லை என்பது இறுதியில்தான் நமக்கு புரிகின்றது. ஆகையால், இந்த சிறுவர்களை தற்போது நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், சிறுவர்களின் எண்ணம் தற்போது நிறைவேறியிருப்பதையும் நம்மால் உணர முடிகின்றது.


Click it and Unblock the Notifications








