அவசரத்திற்காக விளைநிலத்தில் கார் ஓட்டி சென்ற அமைச்சரால் பயிர்களை இழந்த விவசாயி..!!
அவசரத்திற்காக விளைநிலத்தில் கார் ஓட்டி சென்ற அமைச்சரால் பயிர்களை இழந்த விவசாயி..!!
அமைச்சரின் கான்வாய் வாகனங்களை விளைநிலத்தின் மீது சென்றதால், அந்நிலத்தின் விவசாயி வாழ்வாதாரம் இழந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஜல்லூன் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சிறப்பு விருந்தினராக அம்மாநில அமைச்சர் ஜெய்குமார் சிங் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை முடித்து திரும்பும்போது, அதே பகுதியில் வேறொரு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்வதாக இருந்தது.
Recommended Video


இதனால் சாலையில் செல்லாமல், நேரத்தை மிச்சப்படுத்த அமைச்சர் ஜெய்குமார் சிங்கின் கான்வாய் வாகனங்கள், அருகில் இருந்த விளைநிலங்களில் ஏறி சென்றது.

அப்போது விளைநிலங்களில் செல்வதை பார்த்த விவசாயி தேவேந்திர தோஹ்ரா பதறி அடித்துக்கொண்டு கான்வாய் வாகனங்களின் முன் சென்று பாய்ந்தார்.

இதைப்பார்த்து, கான்வாய் வாகனங்கள் நின்றன. அப்போது விவசாயி தனது நிலத்தில் இறங்கி பார்த்த போது, கார்கள் சென்ற பகுதிகளில் எல்லாம் பயிர்கள் நசுங்கி இருந்தன.

தற்போது வட மாநிலங்களில் இருக்கும் தடப்வெட்ப நிலைக்கு ஏற்றவாறு, கடுகு பயிர்களை தனது நிலத்தில் பயிரிட்டு இருந்தார் விவசாயி தேவேந்திர தோஹ்ரா.

ஆனால் பெரும்பாலான பயிர்கள் அனைத்தும் காரின் டயரால் நசுக்கப்பட்டு இருந்தன. இதனால் நசுங்கிய பயிரை கையில் ஏந்தி கதறினார் அவர்.

தேவேந்திர தோஹ்ரா அழுததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது. நிலமையை உணர்ந்து காரில் இருந்து இறங்கினார் அமைச்சர் ஜெய்குமார் சிங்.

அப்போது விவசாயி அமைச்சரின் காலில் விழுந்து தனது நிலமையை கூறினார். மொத்த கான்வாய் வாகனங்களும் பயிர்களை நாசப்படுத்தியதாக கவலை தெரிவித்தார்.

இதனால் தேவேந்திர தோஹ்ராவை ஆறுதல்படுத்தி அமைச்சர் ஜெய்குமார் சிங் விவசாயி வேண்டாம் என்று கூறியும் அவரது சட்டப்பையில் ரூ.4000/- திணித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைக்குறித்து ஏ.என்.ஐ செய்தி பதிவிட்டுள்ளது. மேலும் என்.டி.டி.வி தொலைக்காட்சியும்
தேவேந்திர தோஹ்ராவின் நிலைமை செய்தியாக வெளியிட்டுள்ளது.

ரூ.8000/- கடனாக வாங்கி கடுகை பயிரிட்டுருந்தார் அந்த விவசாயி, ஆனால் அமைச்சர் கொடுத்தரூ.4000 மேலும் நஷ்டமே என கவலை தெரிவிக்கிறார்தேவேந்திர தோஹ்ரா.

விளைநிலத்தின் மீது மொத்த கான்வாய் வாகனம் சென்றதை பற்றி நாளிதழுக்கு பேசிய அமைச்சர் ஜெய்குமார் சிங்,

விவசாய நிலத்தில் பயிர்கள் இருப்பது தெரியவில்லை என்றும், விழா ஏற்பட்டாளர்கள் தவறான வழியை காட்டியதால் இந்த தவறு நடந்துள்ளது எனக்கூறியுள்ளார் அமைச்சர் ஜெய்குமார் சிங்.


Click it and Unblock the Notifications








