புகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..?
போக்குவரத்து டிராஃபிக் பற்றி புகார் கொடுத்தவரையே டிராஃபிக்கை கிளியர் செய்யுமாறு தலைமை காவலர் ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக சாலையில் போக்குவரத்து நெரிசலைப் பார்த்தால், நீங்கள என்ன செய்வீங்க... பல வாகன ஓட்டிகள் வாகன நெரிசலுக்கு ஏற்ப ஆமை போல் நகர்ந்து கடப்பார்கள். ஆனால், இங்கு ஓர் இளைஞர் அதிக நெரிசல் இருக்கு சீக்கிரம் கிளியர் செய்யுங்க என்று போக்குவரத்து போலீஸாரிடம் முறையிட்டுள்ளார். பதிலுக்கு, அந்த போலீஸாரே அந்த நபரையே போக்குவரத்து போலீஸார் பார்க்கச் செய்துள்ளார்.

இதுபோன்ற, ஒரு சில விநோதமான சம்பவங்களை எல்லாம் இந்தியாவைத் தவிர உலகின் வேறெந்த நாட்டிலும் காண முடியாது. நீங்கள் ஓர் வெளிநாடு சுற்றுலாப் பயணி என்றால் வெளிநாட்டில் உள்ள போக்குவரத்திற்கும் நம் இந்திய நாட்டில் உள்ள போக்குவரத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை உணர முடியும்.

இதனை அறிய சுற்றுலாதான் சென்றிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை, ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களாக இருந்தாலே போதும். வெளிநாடுகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, இந்திய சாலையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் நம்மில் பலருக்கே பிடிக்காத, அருவறுப்பு ஏற்படுத்தவையாக இருக்கின்றன. ஆனால், அதையும் ஒரு சில இக்கட்டான சூழ்நிலையில் நாமேகூட செய்திருப்போம். இதனை காரணங்கள் கூறி நியாயப்படுத்திவிட முடியாது. நாம் அனைவரும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய ஒன்று.

அவ்வாறு, நாம் செய்யும் சிறு சிறு தவறுகள்கூட அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக, தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் முறையற்ற பார்க்கிங் செய்வது போன்ற பல்வேறு தவறுகள் இதற்கு முக்கிய காரணங்களான இருக்கின்றன.

அந்தவகையில், ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலைப் பற்றி புகார் அளித்தவரையே, போலீஸார் தற்காலிக போக்குவரத்து போலீஸாராக மாற்றியுள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபெரோசாபாத் என்னும் பகுதியில் அரங்கேறியிருக்கின்றது.

பொதுவாக, தன்னார்வ நபர்கள் இதுபோன்ற சேவையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு அலுவலக நேரங்களிலும் போக்குவரத்து பணியில் ஈடுபடுவதைக் கண்டிருப்போம். ஆனால், புகார் அளித்தவரையே பணியில் ஈடுபடச் செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.

அந்த வழி போக்கரின் பெயர் சோனு சவுகன் என்று கூறப்படுகின்றது. இவர்தான் மூத்த போக்குவரத்துத்துறை போலீஸ் அதிகாரியான சச்சிந்திர படேல் என்பவருக்கு உதவியாக சுமார் 2 மணி நேரங்களுக்கும் அதிகமாக போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பணியின்போது அவருக்கு சிறப்பு ஜாக்கெட் ஒன்றை போலீஸார் வழங்கியுள்ளனர். இது, சாலையின் நடுவில் ஓர் நபர் பணியில் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்த உதவும்.
இதுபோன்ற உடையைதான் தன்னார்வ சேவையாளர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியின்போது அணிவர். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமின்றி அந்த போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சோனு உதவி புரிந்துள்ளார்.

மேலும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து அபராதச் செல்லாணை வழங்கினார். குறிப்பாக, தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது போன்ற பல்வேறு விதிமீறல்களுக்கு சோனு அபராதத்தை விதித்ததாக தெரிகின்றது.
வெறும் இரண்டு மணி நேரத்தில் சுமார் 1,600 ரூபாய்க்கும் அதிகமான அபரதாத்தை அவர் விதித்ததாக கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, பலர் தங்களிடம் போதுமான தொகை இல்லாத காரணத்தால் செல்லாணை மட்டுமே வாங்கிச் சென்றுள்ளனர். இந்த பணியின்போது சோனுவுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக அவரை எப்போதும் போலீஸார் தங்களின் கவனிப்பு வலைக்குள்ளேயே வைத்திருந்தனர்.

இந்த பணியில் அவர் ஈடுபட்டது மிகவும் உதவியாக இருந்ததாகப் போலீஸார் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தன்னார்வளர்களை வரும்காலத்தில் தினமும் இரண்டு நேரங்கள் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட இருப்பதாக ஃபெரோஸாபாத் போலீஸார் கூறினார்.
இந்த தற்காலிக பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாமக ஈடுபட்ட சோனு கூறியதாவது, "இந்த தற்காலிக சேவைப் பணியின் மூலம் போக்குவரத்து போலீஸார் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் உணர்ந்துள்ளேன். நாம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது ஏற்படும் அவர்கள் எத்தகைய சிக்கலைச் சந்திக்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டேன். ஒரு வாகனம் தவறில் ஈடுபடுவதால் மற்ற அனைத்து வாகனங்களும் பாதிப்படைகின்றது. இந்த பணிக்குப் பிறகு நான் நிச்சயமாக அதிக பொறுப்புள்ள குடிமகனாக மாறிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications








