Just In
- 17 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 56 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்
இந்தியாவை பொறுத்தவரையில் சாலைகளில் சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் சாகசங்களை செய்யும் வாகன ஓட்டிகளை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
அவ்வாறான சாலை சாகச நிகழ்வை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். உத்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் சாலை கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களில் பெரிதும் மேம்பட்டுள்ளன. ஆனால் இதனை தவறாக பயன்படுத்துவோரும் இருக்கதான் செய்கின்றனர். மேலுள்ள வீடியோவில் மூன்று கார்களில் காலியான நெடுஞ்சாலை ஒன்றில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு செல்பி மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. இந்த வகையில் நெடுஞ்சாலையில் வேகமாக இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் ஏறி சில இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அதிவேகத்தில் இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் நடனமாடியும் பார்த்துள்ளனர்.
மொத்தமாக 3 கார்களில் எப்படியிருந்தாலும் 12 இளைஞர்கள் இருப்பர். வெறும் 25 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இந்த வீடியோ இருந்தாலும், இந்த சில வினாடிகளிலேயே இது எத்தகைய குற்றம் செயல் என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது.
இது தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலானது மட்டுமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து புகார்கள் அதிகளவில் வெளிவர துவங்கியதை அடுத்து இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாவிடினும், போலீஸார் இதுகுறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.
வீடியோக்களை வைத்து இளைஞர்களை அடையாளம் காண போலீஸார் தீவிரமாக உள்ளனர். அதேநேரம் கார்களை அவற்றின் பதிவெண் மூலம் கண்டறியவும் போலீஸார் முயற்சித்து வருகின்றனர். வீடியோவில் காரின் பதிவெண்ணை அவ்வளவாக தெளிவாக பார்க்க முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால், ஒரு காரில் பதிவெண் பலகையே இல்லை. போலீஸார் தங்களை தேடக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் அவற்றை நீக்கியிருக்கலாம். ஏனெனில் பொது சாலையில் இவ்வாறான சாகசங்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது போன்ற சாலை சாகசங்கள் விபத்தில் சென்று முடிய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறான ஸ்டண்ட்களை மேற்கொள்வோர் மட்டுமின்றி அருகில் செல்லும் மற்ற வாகனங்களும் பாதிப்படைய கூடும். இணையம் நமது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதால் இவ்வாறான சம்பவங்கள் உடனடியாகவும் அதிகளவிலும் நமக்கு தெரியவந்து கொண்டிருக்கின்றன.
போலீஸாரும் சிசிடிவி வீடியோக்களை வைத்தே குற்றவாளிகளை பிடிக்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்டத்தை போலீஸார் எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.