Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்
5 வயது சிறுவன் பென்ஸ் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த சிறுவன் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி.
இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் அவசியமாகிறது. எனவே சொந்தமாக கார் வாங்குவதில் பலரும் ஆர்வமாக உள்ளனர். சொந்தமாக கார் இருக்கும் பட்சத்தில், செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் குடும்பத்துடன் சென்று வந்து விட முடியும். ஆனால் கார்களின் விலை சற்று அதிகம் என்பதால், அனைவராலும் சொந்த கார் வாங்க முடிவதில்லை.
எனினும் செகண்ட் ஹேண்டிலாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என தொடர்ந்து பலர் முயற்சி செய்து கொண்டேதான் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும். அதே சமயம் இந்த சம்பவம் ஒரு சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி (Lamborghini) நிறுவனம், மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. லம்போர்கினி கார்களின் வேகம், கவர்ச்சிகரமான டிசைன் ஆகிய அம்சங்களால், உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். ஒரு லம்போர்கினி காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஏராளம்.
இப்படி லம்போர்கினி கார்கள் மீது பலர் பைத்தியமாய் உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒரு சிறுவன் செய்த காரியம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லம்போர்கினி காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்பதற்காக, அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில்! இதற்கே ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் அந்த சிறுவனுக்கு 5 வயது மட்டுமே ஆகிறது!!
உலகமே தற்போது கொரோனா வைரஸால் (கோவிட்-19) கதிகலங்கி போய் நிற்கிறது. குறிப்பாக வல்லரசான அமெரிக்கா, கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்து போயுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலுக்கு மத்தியில், இந்த வினோதமான சம்பவம் நேற்று முன் தினம் (மே 4ம் தேதி) அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஆக்டன் நகரை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு, லம்போர்கினி கார்கள் என்றால் கொள்ளை பிரியம். எனவே லம்போர்கினி கார் வாங்கி தரும்படி பெற்றோரை நச்சரித்து கொண்டே இருந்துள்ளார். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர், லம்போர்கினி கோரிக்கைக்கு 'நோ' சொல்லியுள்ளனர்.
குறிப்பாக நேற்று முன் தினம் அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் மிக கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுவனின் தாய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தன் அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து கொண்டு அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். காரை ஓட்டியதும் அந்த சிறுவன்தான்!!!
உட்டாவில் இருந்து கலிபோர்னியா சென்று சொந்தமாக லம்போர்கினி காரை வாங்கி விட வேண்டும் என்பது அந்த சிறுவனின் திட்டம். ஆனால் அந்த சிறுவனின் பாக்கெட்டில் வெறும் 3 அமெரிக்க டாலர்கள் மட்டும்தான் இருந்தன. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 200 ரூபாய். இந்த பணத்தை வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை அந்த சிறுவன் வாங்குவதற்கு சென்றுள்ளார்.
ஆனால் வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள், அந்த சிறுவனின் திட்டம் வீணாய் போய் விட்டது. ஏனெனில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அச்சிறுவன் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தி விட்டனர். ஆரம்பத்தில் யாரோ காரை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர் என்றுதான் ரோந்து போலீசார் நினைத்துள்ளனர்.
ஆனால் காரை நிறுத்திய பின்பு 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் உள்ளே இருப்பதை பார்த்து அவர்களே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். போலீசார் நிறுத்திய சமயத்தில், அந்த சிறுவன் இருக்கையின் நுனியில் அமர்ந்து காரை ஓட்டி வந்துள்ளார். இதன் மூலம் அந்த சிறுவனின் கால்களுக்கு எப்படியோ பெடல்கள் எட்டியுள்ளன.
5 வயது சிறுவன் கார் ஓட்டியதால், போலீசார் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எனவே எங்கே கார் ஓட்ட கற்று கொண்டாய்? என அந்த சிறுவனிடமே போலீசார் கேள்வி எழுப்பினர். ஆனால் சிறுவன் என்பதால், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் சிறுவன் கார் ஓட்டி வந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பொது சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த சிறுவனை உடன் பிறந்தவரின் கண்காணிப்பில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த சிறுவன் காரை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Note: Lamborghini images used are for representational purpose only.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!