ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் போர்க்கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு..!!
ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் போர்க்கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு..!!
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மூழ்கடித்த அமெரிக்கா போர்க்கப்பலின் உடைந்த பாகங்கள் சில வட பசிபிக் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மனித உயிர்களை அதிகம் பலிவாங்கிய போர் என்றால் அது இரண்டாம் உலகப்போர் தான். இதில் தான் உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பு ஜப்பானில் நிகழ்த்தப்பட்டது.

அமெரிக்கா அரசு ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் வீசிய அணுகுண்டால், லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. அந்த நகரமே சின்னாபின்னமாகி போனது.

அணுகுண்டுக்கான முக்கிய தளாவாடங்களை ஜப்பானில் இறக்கிவிட்டு அமெரிக்காவின் போர்க்கப்பல்,
யு.எஸ்.எஸ். இன்டியானாபொலிஸ் பசிபிக் பெருங்கடலில் வழியே வரும் போத் தான் அதன் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியுள்ளது.

1945 ஜூலை 30ம் தேதியன்று ஜப்பானின் ஐ-58 நீர்மூழ்கி கப்பல் ஃபிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் யு.எஸ்.எஸ். இன்டியானாபொலிஸ் கப்பலை வழிமறித்து தாக்குதல் நடத்தியது.

கடுமையாக நடைபெற்ற இந்த தாக்குதலில் இன்டியானாபொலிஸ்கப்பலில் இருந்த 1196 அமெரிக்க படை வீரர்களில் 316 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

மீதி பேர் இறந்துவிட அந்த பகுதியிலேயே யு.எஸ்.எஸ். இன்டியானாபொலிஸ் கப்பலை ஜப்பானின் ஐ-58 நீர்மூழ்கி கப்பல் பசிபிக் கடலில் மூழ்கடித்தது.

இந்த போர்க்கப்பலை பற்றி ஆராய்ந்து வந்த சில ஆய்வாளர்கள் குழு, கடந்தாண்டு அதன் எச்சங்களை தேடி வட பசிபிக் கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள கிளம்பினர்.

யு.எஸ்.எஸ். இன்டியானாபொலிஸ் மூழ்கியதாக கருதப்படும் கடல் பரப்பளவு தற்போது ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்பகுதியில் உள்ளது.

இங்கு சுமார் 5500 மீட்டர் ஆழத்தில் இன்டியானாபொலிஸ் கப்பலின் சில உடைந்த பாகங்களை அமெரிக்காவின் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சிக் குழுவின் தலைமை பொறுப்பாளர் பால் ஆலன்,
நாட்டிற்காக உயிர்துறந்தவர்களின் முக்கிய நினைவுச்சின்னமாக இந்த போர்க்கப்பலின் பாகங்கள் இருக்கும் எனவும், அதற்க்கு வீர வணக்கங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஆலன் கூறும்போது கிடைத்திறக்கக்கூடிய பாகங்கள் இன்டியானாபொலிஸ் கப்பலின் எச்சங்கள் தானா என்பதை நிரூபிக்க தொடர்ந்து இதே பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும் எனறு தெரிவித்தார்.

இன்டியானாபொலிஸ் கப்பல் தாக்குத்தலில் இருந்த தப்பிய 316 அமெரிக்க படை வீரர்களில் 22 பேர் மட்டுமே உயிருடன் உள்ளார்கள்.

கிடைத்த பாகங்கள், இன்டியானாபொலிஸ் கப்பலின் எச்சங்கள் என உறுதியான பின்னர், முன்னாள் படை வீரர்களை கவுரவிக்கும் திட்டமும் அமெரிக்க அரசிடம் உள்ளது.


Click it and Unblock the Notifications








