Just In
- 55 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Movies Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
வைரலாகும் வீடியோ... காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடுகிறது...
காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடி வருகிறது. இது குறித்த தகவல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமே. இந்த வகையில் தீபாவளி பண்டிகை சமீபத்தில் இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும், கோர்ட்களும் பட்டாசுகளை வெடிக்க சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆனால் வழக்கம் போல அதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பலர் கட்டுப்பாடுகளை மீறி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்த சூழலில் ஓடி கொண்டிருக்கும் காரில் பட்டாசுகளை வெடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஓடி கொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் வைத்து பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
காருக்கு உள்ளே இருந்தபடி சன் ரூஃப் மூலமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. சன் ரூஃப் வழியாக ராக்கெட்களும் விடப்பட்டுள்ளன. பட்டாசுகள் வெடிக்கப்பட்ட காருக்கு பின்னால் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே இருந்தவர்களின் இந்த சேட்டை தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான நேரம் தெரியவில்லை. ஆனால் உத்தர பிரதேச அரசு பட்டாசு வெடிக்க இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் நிர்ணயித்திருந்தது. ஓடி கொண்டிருக்கும் வாகனத்திற்கு உள்ளே இருந்தபடி பட்டாசு வெடிப்பது மிகவும் அபாயகரமானது. அது சட்ட விரோதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவில் காரின் பதிவு எண் சரியாக தெரியவில்லை. எனவே காரில் இருந்து பட்டாசு வெடித்தவர்களை கண்டறிவதில் காவல் துறை சவாலை எதிர்கொண்டுள்ளது. எனினும் தவறை செய்தவர்கள் கண்டறியப்படுவார்கள் என நம்பலாம்.
பொதுவாக பட்டாசுகளை வெடிப்பதே ஆபத்தானதுதான். பட்டாசுகளை வெடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓடி கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்தபடி பட்டாசு வெடிப்பது இன்னும் ஆபத்தானது. ஏனெனில் வாகனத்தின் கேபினில் உள்ள மெட்டீரியல்கள் எளிதாக தீப்பற்றி கொள்ளும் தன்மை உடையவை.
குறிப்பாக வாகனத்தின் இருக்கைகளில் தீப்பற்ற சிறு தீப்பொறி போதும். அத்துடன் ஓடி கொண்டிருக்கும் வாகனத்தில் பட்டாசு வெடித்தால், அது கேபினுக்குள் விழுந்து விடுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே இதுபோன்ற விபரீத முயற்சிகளை நீங்கள் எப்போதும் செய்ய வேண்டாம். தற்போது வைரலாக பரவி கொண்டுள்ள இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதுபோன்ற செயல்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. தற்போது ஹோண்டா சிட்டி காருக்குள் இருந்தவர்களை கண்டறிய போலீசார் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா