Just In
- 37 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 48 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிரிப்ப அடக்க முடியல... ஏடிஎம் அட்டையை திருடி விட்டு கொள்ளையர்கள் செய்த காரியம்... என்னனு தெரியுமா?
ஏடிஎம் அட்டையை திருடி விட்டு இரண்டு கொள்ளையர்கள் செய்த காரியம், சிரிப்பை வரவழைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா காவல் துறையினர், 2 கொள்ளையர்களை திரைப்பட பாணியில் விரட்டி பிடித்துள்ளனர். ஆனால் காவல் துறையினரிடம் சிக்குவதற்கு முன்பு, இரண்டு கொள்ளையர்களும் செய்த காமெடி சமூக வலை தளங்களில் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. நேற்று முன் தினம் (ஜூலை 22ம் தேதி) இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
நொய்டாவை சேர்ந்த ஒருவர் இரவு உணவு அருந்துவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள், அவரின் கைப்பேசி மற்றும் மணி பர்ஸை துப்பாக்கி முனையில் திருடி விட்டு தப்பி சென்றனர். திருடப்பட்ட மணி பர்ஸில், கொஞ்சம் பணம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவை இருந்துள்ளன.
ஆனால் கொஞ்ச தூரம் சென்ற பிறகு கொள்ளையர்கள் இருவரும் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். இதற்கான காரணம், குபீர் சிரிப்பை வரவழைக்கும் ரகம். ஏடிஎம் அட்டையை பறிகொடுத்தவரிடமே, அதனுடைய கடவுச்சொல்லை கேட்பதற்காக அவர்கள் திரும்பி வந்தனர். பின்பு மீண்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் திருடர்கள் இருவரும் வந்த பைக்கை, ஓரிடத்தில் காவல் துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் பைக்கை நிறுத்தும்படி காவல் துறையினர் கூறியும், அவர்கள் நிறுத்தவில்லை. அதற்கு மாறாக காவல் துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.
இதன் காரணமாக அவர்களை காவல் துறையினர் விரட்டி சென்றனர். அத்துடன் பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், இருவரும் காயமடைந்து கீழே விழுந்தனர். இதன்பின் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினரிடம் சிக்கியுள்ள இரண்டு பேரும், கௌரவ் சிங் மற்றும் சதானந்த் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொள்ளையடித்த மணி பர்ஸ், 3,200 ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் அட்டையுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளும், அவர்களின் பைக்கும் காவல் துறையினரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தை நடத்துவதற்கு அவர்கள் இருவரும் பயன்படுத்திய பைக் யாரிடம் இருந்தாவது திருடப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பொதுவாக நகை பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு யாரிடம் இருந்தாவது திருடப்பட்ட பைக்கைதான் சமூக விரோதிகள் பயன்படுத்துவார்கள்.
அவர்களை பொறுத்தவரை, காவல் துறையினரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க, திருடப்பட்ட பைக்குகள்தான் சிறந்தது. எனவே சமூக விரோதிகளிடம் இருந்து உங்கள் பைக்கை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக மிகவும் எளிதாக கொள்ளையடிக்கக்கூடிய பைக்குகள்தான் திருடர்களின் முதல் தேர்வாக இருக்கும்.
ஒரு சிலர் ஞாபக மறதி காரணமாக, சாவியை பைக்கிலேயே விட்டு சென்று விடுகின்றனர். திருடர்களுடைய பணியை இது எளிதாக்கி விடும். இதுபோன்று சாவி இருக்கும் பைக்குகள்தான் கொள்ளையர்களின் முதல் குறி. எனவே எக்காரணத்தை கொண்டும் சாவியை பைக்கில் விட்டு செல்லாதீர்கள். அத்துடன் பைக் பூட்டப்பட்டுள்ளதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.
அத்துடன் பைக்கை நிறுத்தி வைக்கும் இடங்களில், ஒரு சில யுக்திகளையும் நீங்கள் கையாளலாம். இதன்படி திருடர்களின் பார்வையில் படாதபடி, எஸ்யூவி கார்கள் போன்ற பெரிய வாகனங்களுக்கு பின்னால் உங்கள் பைக்கை நிறுத்தலாம். கொள்ளையர்களின் பார்வையிலேயே சிக்காது என்பதால், உங்கள் பைக் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
இதுதவிர மற்றவர்களின் பைக்குகளுடன் சேர்த்து உங்கள் பைக்கையும் நிறுத்தி வைக்கும் யுக்தியையும் கடைபிடிக்கலாம். நீங்கள் பலருடன் சேர்ந்து ஒரு குழுவாக சென்றால், கண்டிப்பாக உங்கள் பைக்கிற்கு அருகே சில பைக்குகள் நிற்கும். அதுவே தனியாக செல்லும்பட்சத்தில், வேறு சில பைக்குகள் நிற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டறிந்து, அங்கே உங்கள் பைக்கை நிறுத்த வேண்டும்.
இது ஏன் நல்ல திட்டம்? என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பைக்குகள் குழுவாக இருக்கும்பட்சத்தில், உங்கள் பைக் குறி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது முதல் காரணம். அதிக பைக்குகள் நிற்கிறது என்றால், அதிகம் பேர் வந்து செல்வார்கள் என்பதை குறிக்கும். எனவே கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தயங்குவார்கள் என்பது இரண்டாவது காரணம்.
இதுதவிர பைக்குகள் கொள்ளையடிக்கப்பட்டால், அதனை கண்டுபிடிப்பதற்கான சாதனங்களையும் வாங்கி பொருத்தி கொள்வது நல்லது. இதுபோன்ற சாதனங்கள் ஓரளவிற்கு குறைவான விலையிலேயே சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய பைக்கை பாதுகாக்க, இதுபோன்ற சாதனங்களுக்கு கொஞ்சம் செலவிடுவதில் தவறில்லை.
Note: Images used are for representational purpose only.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!