Just In
- 14 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...
இளைஞர் ஒருவர் நடுரோட்டில் போட்டு பைக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் சமீபத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில்தான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போலீசார் புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.
இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே சில இடங்களில் கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த புதிதில், அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவமும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் போலீசார் இந்த நடவடிக்கையால் அந்த இளைஞர் விரக்தியடைந்தார். இதன்பின் அவர் திடீரென தனது பைக்கை சாலையில் போட்டு உடைக்க தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளுக்கு பின்பாக அவர் தனது பைக்கை சாலையில் போட்டு அதன் மீது அமர்ந்து அழ தொடங்கி விட்டார்.
விரக்தியில் பைக்கை உடைத்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த இளைஞருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபராத தொகைகளை உயர்த்தியது தவறு என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.
அதே சமயம் விதிமுறைகளின் படி ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை.
உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவேதான் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!