Just In
- 36 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காத்தையே கிழிக்க போகுது நம்ம வந்தே பாரத் ரயில்கள்... இனி ஒக்காந்துட்டு மட்டுமல்ல படுத்துட்டு போகலாம்..
220 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் கோச் உடன் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் உருவாக்கம் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
விரைவில் வந்தே பாரத் ரயிலின் புதிய ஸ்லீப்பர் வெர்ஷன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்களைக் காட்டிலும் அதிக சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் இந்த ரயில் இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தூர பயணங்களை அசதியில்லாமல் மேற்கொள்ள ஏதுவாக அதிக வசதிகளுடன் இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை உருவாக்க இருப்பதாக ரயில்வேஸைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சுமார் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க பிளான் போடப்பட்டு இருக்கின்றது. இதில், 200 ஸ்லீப்பர் வெர்சனாகவும், 200 சீட்டர் வெர்சனாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. இதையும் ரயில்வேஸைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இதுமட்டும் இல்லைங்க ஸ்லீப்பர் வெர்ஷன் மணிக்கு 220 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் அலுமினியத்தாலும், இருக்கை அமைப்பைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை உலோகத்தாலும் (ஸ்டீலால்) தயாரிக்க ரயில்வேஸ் திட்டம் போட்டு இருக்கின்றது. இத்தகைய வந்தே பாரத் ரயில்களே வெகு விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இவற்றை உருவாக்கும் பணிகளே தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் எடைக் குறைவானதாக இருக்கவே அவை அலுமினியத்தால் உருவாக்கப்பட இருக்கின்றன.
இந்த யுக்தியே மணிக்கு 220 கிமீட்டர் வேகத்தை ஸ்லீப்பர் வந்தே பாரத்தில் சாத்தியமாக்க இருக்கின்றது. முதலில் சீட்டர் ரக வந்தே பாரத் ரயிலே தயாரிக்கப்பட இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ வேகமாக இருக்கும். இருப்பினும், பயன்பாட்டிற்கு வரும்போது அது மணிக்கு 130 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே இரண்டாம் கட்டமாக ஸ்லீப்பர ரக வந்த பாரத் ரயில் தயாரிக்கப்பட இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 220 ஆக இருந்தாலும், அது 200 கிமீ வேகம் வரை இயக்கப்பட இருக்கின்றது. இதில், இருக்கை அமைப்பைக் கொண்ட (சீட்டர் வெர்ஷன்) வந்தே பாரத் ரயில்கள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக களமிறக்கப்பட உள்ளது. இதேபோல், ஸ்லீப்பர் வெர்ஷன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு மாற்றாக அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கட்டமாக வந்தே பாரத் ரயில்கள் களமிறக்கப்பட்டு பழைய ரயில்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட இருக்கின்றன.
புதிய ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்புதல் வெகு விரைவிலேயே கிடைத்துவிடும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பட்டு உருவாக்க பணிகள் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகின்றது. அனைத்து ரயில்களையும் உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என பலர் வந்தே பாரத் ரயிலை தயாரிக்க முன் வந்திருப்பதாக ரயில்வேத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா ஆகிய வழத் தடங்களில் முதலில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இவை பயன்பாட்டிற்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த வழித்தடங்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது. சிக்னல் சிஸ்டத்தை மேம்படுத்துதல், மேம்பாலங்களை முறைப்படுத்துதல் மற்றும் பல முதன்மையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுதவிர விபத்தைத் தவிர்ப்பதகற்கான தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் அடுத்த இரண்டுகளில் சென்னையில் உள்ள ஐசிஎஃப், மஹாராஷ்டிராவில் உள்ள லத்தூர் ரயில் தொழிற்சாலை மற்றும் ஹரியானாவில் உள்ள சோனபட் ஆகிய ரயில் உற்பத்தி ஆலைகளிலேயே புதிய வந்தே பாரத் ரயில்கள் 400-ம் தயாரிக்கப்பட இருக்கின்றன.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!