Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கிராப்பேஜ் கொள்கை வெளியானது... பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா?
பழைய வாகன அழிப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பழைய வாகன அழிப்பு கொள்கை (Vehicle Scrappage Policy), இறுதியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் கீழ், தங்களது பழைய கார்களை ஸ்கிராப் செய்யும் நபர்கள், புதிய கார்களை வாங்கும்போது சாலை வரியில் தள்ளுபடி பெற முடியும்.

பயணிகள் வாகனங்கள் என்றால் 25 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதுவே வர்த்தக வாகனங்கள் என்றால் 15 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். அத்துடன் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் இருந்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது பதிவு கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய முடியும்.

மேலும் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பழைய வாகனங்களின் பதிவு சான்றிதழ் மற்றும் எஃப்சி-யை புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பழைய வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடம் இருந்து விலகும் என அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் எந்தவொரு தனியார் வாகனம் அல்லது வர்த்தக வாகனம் என்றாலும், ஃபிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்தாலோ அல்லது உரிமையாளர் சரியான நேரத்தில் பதிவை புதுப்பிக்க தவறினாலோ, அதன் ஆயுள் முடிவடைந்ததாக அறிவிக்கப்படும்.

கூடுதலாக பழைய வாகனங்கள் மீது மாநில அரசுகளால் பசுமை வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் ஸ்கிராப் செய்யப்படும் வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஸ்கிராப்பிங் மையங்கள் பராமரிக்கும். மேலும் ஸ்கிராப் செய்யப்படுவதற்கு முன்னதாக வாகனங்களின் உரிமையாளர் குறித்த தகவல்கள் வாகன் டேட்டாபேஸ் மூலம் சரிபார்க்கப்படும்.

திருடப்பட்ட வாகனங்கள் ஸ்கிராப் செய்ய அனுமதிக்கப்படாது. அதே சமயம் வாகனம் எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் உரிமையாளர் இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள ஸ்கிராப்பிங் மையத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அதே நேரத்தில் தீ, கலவரம் மற்றும் பேரழிவுகளில் சேதமடைந்த வாகனங்கள் ஸ்கிராப் செய்வதற்கு தகுதி உடையவையாக கருதப்படும்.

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் மூலம் காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் இதன் மூலம் குறையும் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழைய வாகனங்களால் எரிபொருள் வீணாக அதிகளவில் செலவு ஆவதும், இந்த புதிய கொள்கையின் மூலம் தவிர்க்கப்படும்.

காற்று மாசுபாடு, சாலை விபத்துக்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய மூன்றுமே இந்தியாவிற்கு பெரும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பழைய வாகன அழிப்பு கொள்கை மூலம் புதிய வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.