பெட்ரோல், டீசலுக்கு மாற்றான புதிய எரிபொருளாக மாறுகிறது பீர்... முழுத் தகவல்கள்..!!
பெட்ரோல், டீசலுக்கு மாற்றான புதிய எரிபொருளாக மாறுகிறது பீர்... முழுத் தகவல்கள்..!!
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு புதிய எரிபொருளை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெற்றிக்கரமாக முடிந்துள்ளது என இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.

மது, ஆல்கஹால் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணமாக இருப்பது எத்தனால் என்ற ரசயான கலவை.
மதுவில் இருக்கும் எத்தனாலை, வேதியல் தனிமங்களை கொண்டு பியூட்டனலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

இந்த கோட்பாட்டை பின்பற்றி, பல ஆராய்ச்சிகள் மதுவகையில் இருந்து வாகனங்களுக்கான எரிபொருளை உருவாக்க ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொண்டு வந்தனர்.
Recommended Video


ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக பல ஆராய்ச்சிகள் குழுவினர் தெரிவித்து வந்தனர்.
பிரிஸ்டோல் பல்கலைக்கழக வேதியல் ஆராய்ச்சியாளர்கள், மதுவகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முயன்றனர்.

அவற்றின் மூலம் சில வேதியல் பொருட்கள் உருவானாலும், அது வாகனத்துக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எத்தனால் மூலம் பியூட்டனால் பெறும் தொழில்நுட்பத்தை பீரிலிருந்து பெற அந்த அராய்ச்சிக்குழு முடிவு செய்தது.

அதற்கான சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பீரிலிருந்து எரிபொருள் பெறும் தொழில்நுட்பம் வெற்றியடந்துள்ளதாக அந்த அராய்ச்சிக்குழு கூறியுள்ளது.

குறிப்பாக அந்த எரிபொருள் வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட போது, அது சரியாக இயங்கியது மேலும், அதிக மைலேஜூம் அளித்தது.

பீரிலிருந்து கிடைக்கப்பெற்ற எரிபொருள் சோதனையில் வெற்றி அடைந்துள்ளதால், விரைவில் அது டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகு தான் பீரிலிருந்து எத்தனாலை பியூட்டனாலாக மாற்றுவது நடந்தேறியுள்ளது. அதனால் இதற்கான நடைமுறை மிகவும் கடினமாக அமைந்துள்ளது.

எல்லாருக்கும் ஏற்ற விதத்திலான தொழில்நுட்பத்தோடு இந்த நடைமுறையை மாற்றினால், பீரிலிருந்து எரிபொருளை பெறுவது எளிதான செயல்பாடாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பீர்லிருந்து கிடைக்கப்பெற்ற இந்த எரிபொருள் 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக உலகமே வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயன்று வரும் வேளையில்,
இந்த பீர் எரிபொருள் வெற்றியடைந்தால், பெரிய புரட்சியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


Click it and Unblock the Notifications








