விம்பிள்டன் விளையாடும் நேரத்தில் வீனாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வீனஸ் வில்லியம்ஸ்: ஒருவர் பலி!
விம்பிள்டன் விளையாடும் நேரத்தில் வீனாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வீனஸ் வில்லியம்ஸ்: ஒருவர் பலி..!!
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய ஒரு கார் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 9ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஃபிளோரிடா போலீசார், தற்போது இது குறித்த தீவிர விசாரானையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 9ம் தேதி ஃபிளோரிடாவின் பாம் கடற்கரை வழியாக சென்று கொண்டு இருந்த வீனஸ் வில்லியம்ஸின் கார், எதிரே வயதான தம்பதிகள் ஓட்டிவந்த காரில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

படுகாயம் அடைந்த அந்த தம்பதிகளை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் எதிர்பாராதவிதமாக காரில் பயணம் செய்த முதியவர் இறந்து விட்டார். காரை ஓட்டிய அவரது மனைவி உயிர்பிழைத்தார்.

அமெரிக்காவையே பரபரக்க செய்த இந்த சம்பவத்தில், வீனஸ் வில்லியம்ஸ் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அம்மாகணத்தின் போலீசார் வீனஸ் வில்லியம்ஸ் தான் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கின்றனர்.

காரணம், பாம் கடற்கரையில் வீனஸ் அவரது காரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அவசரமாக திருப்பிய போது தான், இந்த விபத்து நடந்திருக்கிறது.

அதனால் வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிமீறலை செய்துள்ளார் என ஃபிளோரிடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வீனஸின் வழக்கறிஞரோ, சிக்னலில் பச்சை விளக்கு விழந்தவுடன் தான் காரை திரும்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் மற்றும் தனது வழக்கறிஞரின் கருத்துக்கு மாறாக ஒரு கருத்தை இந்த வழக்கில் முன்வைத்துள்ளார் வீனஸ் வில்லியம்ஸ்.

அதாவது, காரை தான் சாலையில் மெதுவாக ஓட்டியதாகவும், வயதான் அந்த தம்பதிகள் பயணித்த காரை பார்க்கவில்லை என்றும் டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் 20வது விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கோப்பையை வெல்ல தீவிரமாக தயாராகி வருகிறார் வீனஸ் வில்லியம்ஸ்.

அனால் எதிர்பாராமல் நடைபெற்ற இந்த சம்பவத்தால் வீனஸ் வில்லியம்ஸின் விம்பிள்டன் கனவு கலைந்துவிடக்கூடாது என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அதே சமயத்தில், ஒருவேளை இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்கு நடவடிக்கைகளும் நியாயமாக இருக்க வேண்டும் எனவும் இதற்கு எதிராக பேசிவரும் பல கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








