Just In
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளம்பெண்ணிடம் இருந்து நைசாக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ்... வீடியோவை பார்த்தால் ஷாக் ஆயிருவீங்க...
இளம்பெண்ணிடம் இருந்து பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் மூலம் தண்டிப்பதற்கான அதிகாரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய போக்குவரத்து காவல் துறையினர் ஒரு சிலர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு, தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சில சமயங்களில் எவ்வித தவறும் செய்யாத வாகன ஓட்டிகளிடமும் அவர்கள் வசூல் வேட்டையாடுவதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.
இதை நிரூபிக்கும் வகையில், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து காவல் துறையினரின் காணொளிகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர், மற்றொரு பெண்ணிடம் இருந்து லஞ்சம் பெறுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. பெண் ஒருவர் ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு அருகே மற்றொரு பெண் நின்று கொண்டுள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ஸ்கூட்டரில் ஒன்றாக வந்தவர்கள் போல தெரிகிறது.
இந்த 2 பெண்களுக்கும் அருகே லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 பெண்களில் ஒருவர், அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியிடம் சென்று ஏதோ பேசுகிறார். அனேகமாக பணத்தை எப்படி கொடுப்பது? என அந்த பெண்ணிடம், போக்குவரத்து காவல் துறை அதிகாரி கூறியதை போல் தெரிகிறது.
இதன்பின் ஸ்கூட்டரில் வந்த பெண் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ரூபாய் தாளை எடுத்து, யாருக்கும் தெரியாதபடி, பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வாகனங்கள் இயங்கும் சப்தத்தையும் இந்த காணொளியில் கேட்க முடிகிறது.
எனவே யாருக்கும் தெரியாமல் அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி லஞ்சம் பெற முயன்றதை போல் தெரிகிறது. ஆனால் அங்கிருந்த யாரோ இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர். லஞ்சம் வாங்கிய பிறகு ஸ்கூட்டரில் வந்த 2 பெண்களையும் அங்கிருந்து செல்வதற்கு, அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் இருப்பதை இந்த காணொளியின் இறுதியில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த காணொளி எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காணொளி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதும், இதுபோன்ற காணொளிகள் வெளியாவதும் இது முதல் முறை கிடையாது. தொடர்ச்சியாக நடந்து வரும் இப்படிப்பட்ட சம்பவங்கள் வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
லஞ்சம் வாங்கும் இத்தகைய போக்குவரத்து காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து காவல் துறையினர் லஞ்சம் வாங்குவது, வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீற வழிவகுக்கும் என்பதும், இதன் காரணமாக சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!