Just In
- 17 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஃபோக்ஸ்வேகன் நடத்திய டீசல் கார் புகை பாதிப்பு சோதனையில் பத்து குரங்குகள் பலி...பரபரப்பு குறச்சாட்டு
ஃபோக்ஸ்வேகன் நடத்திய டீசல் கார் புகை பாதிப்பு சோதனையில் பத்து குரங்குகள் பலி...பரபரப்பு குறச்சாட்டு..!!
மாசு உமிழ்வு மோசடியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை அதகளப்படுத்திய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளது.
2015ம் ஆண்டில் சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கார்களை தயாரித்து ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்ததாக அமெரிக்க அரசு பரபரப்பை கூட்டியது.
இதை தொடர்ந்து உலகளவில் சுமார் 11 மில்லியன் எண்ணிக்கையிலான பல்வேறு மாடல் கார்களை சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக ஃபோக்ஸ்வேகன் தயாரித்திருப்பது தெரியவந்தது.
Recommended Video
இதற்கான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், முறைகேடு செய்து தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறுக்கொள்ளவும் மற்றும் இழப்பீட்டிற்கு உரிய அபாரதம் செலுத்திட வேண்டும் என்ற அமெரிக்க அரசு விதித்த நிபந்தனைகளை ஃபோக்ஸ்வேகன் ஏற்றுக்கொண்டது.
இத்தோடு இப்பிரச்சனை முடிவிற்கு வந்துவிடும் என்று நினைத்தால் மாசு உமிழ்வு மோசடிக்கு முன்னர் அது தொடர்பாக 2014ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நடத்திய சோதனை தற்போது வாகனத்துறை உலகில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.
போக்குவரத்து தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் அதனால் மனிதன் உட்பட பல்வேறு விலங்கினங்களில் நடைபெறும் மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்தது EUGT.
2016ல் இழுத்து மூடப்பட்ட இந்நிறுவனத்திற்கு ஃபோக்ஸ்வேகன், டெய்ம்லர், பிஎம்டபுள்யூ போன்ற உலகளவில் முன்னணி வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிதி அளித்து பராமரித்து வந்தன.
2014ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களுக்கான சோதனையை இயூஜிடி மெக்சிக்கோவில் மேற்கொண்டது. பல டீசல் கார்களிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு என்ற நச்சுபுகை வெளியேற்றப்பட்டு அது 10 குரங்குகள் மட்டும், 25 மனிதர்கள் இருந்த ஒரு அறைக்குள் செலுத்தப்பட்டது.
இந்த சோதனையில் 10 குரங்குகள் பலியானதாகவும் மற்றும் 25 மனிதர்களுக்கு வாந்தி, சுவாசம் முட்டுதல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் ஜெர்மனியின் முன்னணி பத்திரிக்கை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
ஃபோக்ஸ்வேனின் பீட்டல் கார் உட்பட பல்வேறு டீசல் மாடல் கார்களுக்கு வேண்டி இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், அறைக்குள் அடைக்கப்பட்டுயிருந்த குரங்களின் கவனத்தை திசைத்திருப்ப தொலைக்காட்சியில் கார்டூன் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஃபோக்ஸ்வேகனின் தலைமை நிர்வாக அதிகாரியான மத்தாயிஸ் முல்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தாமஸ் ஸ்டெக் பணியிலிருந்து நீக்கப்படுள்ளார்.
டீசல் கார்களிலிருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு (NOx) நச்சுத்தன்மை கொண்டது. அதனால் டீசல் வாகனங்களின் செயல்பாடுகளை கண்டறிய இந்தியா உட்பட பல நாடுகள் தரக்கட்டுபாட்டை நிர்ணயம் செய்து பிறகு விற்பனைக்கு அனுமதிக்கின்றன.
நச்சுத்தன்மை நிறைந்த நைட்ரஸ் ஆக்சைடு மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சுவாச தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்றும் நுரையீரல் செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சியை குறைக்கும் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகனின் டீசல் கார் சோதனை பற்றி கண்டனம் தெரிவித்த ஜெர்மன் பொருளாதார அமைச்சர் பெர்னட் அல்துஸ்மான், இதற்காக அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று கூறியுள்ளார்.
மாசு உமிழ்வு மோசடியில் உலளவில் பெரிய கண்டனங்களை சந்தித்து வரும் ஃபோக்ஸ்வேகன் இந்த சம்பவத்தால் மேலும் பின்னிடவை சந்தித்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் மட்டுமில்லாமல், இயூஜிடி நிறுவனத்திற்கு நிதியளித்து வந்த பிஎம்டபுள்யூ, டெய்ம்லர் போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து புகார்களில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 குரங்குகளை பலி கொடுத்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார் புகை பரிசோதனை நடத்தியது அம்பலம்..!!
மாசு உமிழ்வு மோசடியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை அதகளப்படுத்திய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளது.
2015ம் ஆண்டில் சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கார்களை தயாரித்து ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்ததாக அமெரிக்க அரசு பரபரப்பை கூட்டியது.
இதை தொடர்ந்து உலகளவில் சுமார் 11 மில்லியன் எண்ணிக்கையிலான பல்வேறு மாடல் கார்களை சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக ஃபோக்ஸ்வேகன் தயாரித்திருப்பது தெரியவந்தது.
இதற்கான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், முறைகேடு செய்து தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறுக்கொள்ளவும் மற்றும் இழப்பீட்டிற்கு உரிய அபாரதம் செலுத்திட வேண்டும் என்ற அமெரிக்க அரசு விதித்த நிபந்தனைகளை ஃபோக்ஸ்வேகன் ஏற்றுக்கொண்டது.
இத்தோடு இப்பிரச்சனை முடிவிற்கு வந்துவிடும் என்று நினைத்தால் மாசு உமிழ்வு மோசடிக்கு முன்னர் அது தொடர்பாக 2014ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நடத்திய சோதனை தற்போது வாகனத்துறை உலகில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.
போக்குவரத்து தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் அதனால் மனிதன் உட்பட பல்வேறு விலங்கினங்களில் நடைபெறும் மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்தது EUGT. 2016ல் இழுத்து மூடப்பட்ட இந்நிறுவனத்திற்கு ஃபோக்ஸ்வேகன், டெய்ம்லர், பிஎம்டபுள்யூ போன்ற உலகளவில் முன்னணி வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிதி அளித்து பராமரித்து வந்தன.
2014ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களுக்கான சோதனையை இயூஜிடி மெக்சிக்கோவில் மேற்கொண்டது. பல டீசல் கார்களிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு என்ற நச்சுபுகை வெளியேற்றப்பட்டு அது 10 குரங்குகள் மட்டும், 25 மனிதர்கள் இருந்த ஒரு அறைக்குள் செலுத்தப்பட்டது.
இந்த சோதனையில் 10 குரங்குகள் பலியானதாகவும் மற்றும் 25 மனிதர்களுக்கு வாந்தி, சுவாசம் முட்டுதல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் ஜெர்மனியின் முன்னணி பத்திரிக்கை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
ஃபோக்ஸ்வேனின் பீட்டல் கார் உட்பட பல்வேறு டீசல் மாடல் கார்களுக்கு வேண்டி இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், அறைக்குள் அடைக்கப்பட்டுயிருந்த குரங்களின் கவனத்தை திசைத்திருப்ப தொலைக்காட்சியில் கார்டூன் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஃபோக்ஸ்வேகனின் தலைமை நிர்வாக அதிகாரியான மத்தாயிஸ் முல்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தாமஸ் ஸ்டெக் பணியிலிருந்து நீக்கப்படுள்ளார்.
டீசல் கார்களிலிருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு (NOx) நச்சுத்தன்மை கொண்டது. அதனால் டீசல் வாகனங்களின் செயல்பாடுகளை கண்டறிய இந்தியா உட்பட பல நாடுகள் தரக்கட்டுபாட்டை நிர்ணயம் செய்து பிறகு விற்பனைக்கு அனுமதிக்கின்றன.
நச்சுத்தன்மை நிறைந்த நைட்ரஸ் ஆக்சைடு மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சுவாச தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்றும் நுரையீரல் செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சியை குறைக்கும் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகனின் டீசல் கார் சோதனை பற்றி கண்டனம் தெரிவித்த ஜெர்மன் பொருளாதார அமைச்சர் பெர்னட் அல்துஸ்மான், இதற்காக அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று கூறியுள்ளார்.
மாசு உமிழ்வு மோசடியில் உலளவில் பெரிய கண்டனங்களை சந்தித்து வரும் ஃபோக்ஸ்வேகன் இந்த சம்பவத்தால் மேலும் பின்னிடவை சந்தித்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் மட்டுமில்லாமல், இயூஜிடி நிறுவனத்திற்கு நிதியளித்து வந்த பிஎம்டபுள்யூ, டெய்ம்லர் போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து புகார்களில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.