Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உயர் அதிகாரிகள் இடமே அதிரடி காட்டிய காவலர்கள்! என்ன செஞ்சாங்க தெரிஞ்சா நீங்களே அசந்துருவீங்க!
உயர் அதிகாரிகள் என தெரிந்தும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் அரசு உயர்நிலை பணியாளர்கள் தங்களின் வாகனங்களின் மேற்கூரை சைரன் மற்றும் பீகன் எனப்படும் ஒளிரும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்த கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2017ம் ஆண்டிலேயே முற்று புள்ளி வைத்து விட்டது. அவசர கால வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களில் சைரன்கள் மற்றும் பீகன் மின் விளக்குகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை அமல்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, நாட்டின் பிரதமர் தொடங்கி பல முக்கிய அரசு அதிகாரிகள் தங்களின் வாகனங்களின் மேற்கூரையில் இடம் பெற்றிருந்த சைரன்களையும், மின் விளக்குகளையும் அகற்றினர். இருப்பினும், ஒரு சிலர் மட்டும் தற்போதும் இதனை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.
அத்தகைய வாகனங்கள் மீதே காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க காவல்துறையினரே இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். சைரன்களை பயன்படுத்துவது தங்களுடைய மேல் அதிகாரிகள் என தெரிந்தும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 191 உயரதிகாரிகளின் வாகனங்களில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. சுமார் 72 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் 191 வாகனங்களில் இருந்து சட்ட விரோத சைரன்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவம் மேற்கு வங்க மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளே அரசின் விதியை மீறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசு பொறியியளாளர்கள், மாவட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், வன அலுவலர்கள், துணை செயலாளர்கள், சுகாதார தலைமை மருத்துவ அதிகாரிகள், அரசு மருத்துவமனை கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் வாகனத்தில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.
அரசு பணியாளர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் அமைச்சர் ஒருவரும் சட்ட விரோதமாக சைரன்களைப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வாகனத்தில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டன.
குடியரசு தலைவருக்கே சைரனை பயன்படுத்த தடை:
சைரன்கள் பயன்படுத்துவதற்கான தடை 2017ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அமைச்சர்கள், விஐபிக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு முக்கிய அதிகாரிகள் உட்பட எவரும் சைரன்களை பயன்படுத்தக் கூடாது என்பதே விதியாகும். இந்த விதி குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதிகள் ஆகியோருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதை பல முக்கிய அதிகாரிகள் கடைபிடித்து வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் களையெடுக்கும் வகையிலேயே மேற்கு வங்க காவல்துறையினர் செயல்பட்டிருக்கின்றனர். அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் ராணுவ வாகனங்கள் ஆகியவற்றில் மட்டுமே சைரைன் மற்றும் நீலம், சிவப்பு நிறங்கள் அடங்கிய மின் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!