Just In
- 31 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனி அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
திடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்
எலெக்ட்ரிக் வாகனம் திடீரென வெடித்ததில், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் காற்று மாசுபாடு குறையும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைக்கப்படும்.
இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை கொடுக்கும். இப்படி பல்வேறு நன்மைகள் இருக்கும் காரணத்தால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை சற்று அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்னை, அதன் பாதுகாப்பு குறித்த அச்சம்தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் சில சமயங்களில் திடீரென தீப்பற்றி எரிகின்றன. இதுகுறித்த செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்த மக்களுக்கு அச்சம் உள்ளது.
அந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையிலான ஒரு சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில், எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒன்று திடீரென வெடித்ததில், அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவருக்கு 26 வயது மட்டுமே ஆகிறது.
மால்டா நகரின் இங்கிலீஷ் பஜார் பகுதியில் இருக்கும் கோரப்பிர்-கிருஷ்ணப்பள்ளி சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா திடீரென வெடித்தது. நேற்று முன் தினம் (ஜூலை 1ம் தேதி) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர விபத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் டிரைவரான முகம்மது இல்யஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறுகையில், ''எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் 4 பேட்டரிகளில், 2 பேட்டரிகள் வெடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்றனர். எலெக்ட்ரிக் ரிக்ஸா சாலையில் ஓடி கொண்டிருந்தபோது, திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் திடீரென வெடிப்பதோ அல்லது தீப்பற்றி எரிவதோ இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக உலகின் பல்வேறு பகுதிகளில், எலெக்ட்ரிக் கார்களும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களும் இதேபோல் தீக்கிரையாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில், அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா பலத்த சேதமடைந்துள்ளது.
அதே சமயம் இது சதி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து என்ஐஏ (NIA - National Investigation Agency) விசாரணை நடத்த வேண்டும் என மால்டா (வடக்கு) பாஜக எம்பி காகென் முர்மு வலியுறுத்தியுள்ளார். இதன்பேரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.