Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?
திங்கள் கிழமைகளில் டீசல் வாங்கப்போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை விட டீசலின் விலை 1 ரூபாய்க்கும் மேல் அதிகம் ஆனது. மேலும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் குறைந்து வருகிறது.
எனவே டீசல் கார் வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் தனியார் பேருந்து தொழில் ஏற்கனவே விழி பிதுங்கி நிற்கும் நிலையில், மறுபக்கம் டீசல் விலை உயர்வும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணிக்க மக்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பதைதான் மக்கள் விரும்புகின்றனர்.
ஒருவேளை மக்கள் பயணிக்க முன்வந்தாலும் கூட, பேருந்துகளில் இவ்வளவு பயணிகளை மட்டும்தான் ஏற்றி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில்தான், டீசல் விலையும் உயர்ந்து தனியார் பேருந்து உரிமையாளர்களை பாடாய்படுத்தி வருகிறது.
இதனால் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அம்மாநில அரசு செவி சாய்க்காத காரணத்தால், வித்தியாசமான போராட்டம் ஒன்றை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதன்படி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் இனி திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்கள். வரும் ஜூலை 27ம் தேதி முதல் (திங்கள்) இந்த போராட்டம் தொடங்குகிறது. இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கை குறித்து மாநில அரசு எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து தொழில் திவாலாகி விடும். தற்போது வரும் வசூலை வைத்துக்கொண்டு அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியவில்லை.
எரிபொருள் செலவு, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் சம்பளம், காப்பீடு, வங்கி தவணை, பேருந்து பராமரிப்பு செலவு மற்றும் இதர செலவுகள் என எங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளன. இதை எல்லாம் தற்போது வரும் வசூலை வைத்துக்கொண்டு மேற்கொள்ள முடியவில்லை. எனவேதான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!