வருண பகவானையே வியக்க வைத்த சென்னை மக்களின் சமயோஜிதம்!
வரலாறு காணாத மழையால், வெள்ளப்பெருக்கின் பிடியில் சிக்கி தத்தளித்து வரும் சென்னை மாநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சாலைகள் ஆறுகள், குளம் போல மாறியதால் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. இந்தநிலையில், கடுமையான மழை, சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய போதும், சிலர் தங்களின் அவசியம், அத்தியாவசியம் கருதி சமயோஜிதமாக தங்களது பயணங்களை தொடர்ந்தனர்.

சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால், சமயோஜிதமாக யோசித்து ஜேசிபியின் பக்கெட்டில் பயணித்து வெளியேறும் தொழிலாளர்கள்.

சைலென்சரில் தண்ணீர் புகுந்து விடாமல், இருக்க பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து தற்காலிக தீர்வு கண்ட டாக்ஸி ஓட்டுனர்.

வல்லவனுக்கு சோஃபாவும் படகுதான்.

போக்குவரத்து சாதனங்களை எதிர்பார்க்காமல், நாற்காலியை வைத்து வயதான பெண்மணியை வீட்டிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் இளைஞர்கள்.

இப்படி காலை தூக்கிக்கொண்டு ஆக்சிலரேட்டரை முறுக்கினால் போதுமே...

மழையால் வேலை பாதித்த தட்டு ரிக்ஷா ஓட்டுனர்களின் உதவியுடன் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்...

சான்ஸே இல்ல...
இந்த படத்தை பார்த்து, சென்னைவாசிகளின் ஐடியாவை பார்த்து பிற மாநிலத்தவர்கள் சமூக வலைதளங்களில் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

பஸ்சுக்குள் வெள்ள நீர் இருந்தாலும், பயணத்தை தொடரும் மக்கள்.

ஆறுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கோபத்தில் சாலைகளை ஆறுகளாக்கிய மாற்றிய வருண பகவான்.

சத்யபாமா பல்கலைக வளாகத்தில் சிக்கியவர்கள் படகு மூலமாக மீட்கப்படும் காட்சி.

ஒருபுறம் வேலையிழப்பை தவிர்க்கவும் மறுபுறம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் விதத்தில் தண்ணீரோடு தண்ணீராய் புது தொழிலுக்கு மாறிய தட்டு ரிக்ஷா தொழிலாளர்கள்.

குளங்களும், ஏரிகளும் வீடுகளாய் மாறியதால், வருண பகவான் புண்ணியத்தில் உருவான தற்காலிக குளத்தில் குளித்து மகிழும் சிறுவன்

டோல் பூத்தை முற்றுகையிட்ட வெள்ள நீர்.

ஆற்றில் படகு இயக்குவது போல, சாலையில் படகாய் மாறிய பஸ்சை துணிச்சலாக இயக்கும் ஓட்டுனர்.

குசும்பு
ஓலா டாக்சி கிடைக்குமா? நெட்டிசன்களின் குசும்பு!
Images Source: Facebook


Click it and Unblock the Notifications








