Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாரிசாலனுக்கு வேலூர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் உண்மையில் நடந்தது என்ன? இலுமினாட்டிகளின் சதியா?
வேலுாரில் உள்ள பஜாஜ் சர்வீஸ் சென்டரில் இலுமினாட்டி புகழ் பாரிசலனை சிலர் தாக்கியதாக அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தமிழர்கள்தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என
வேலுாரில் உள்ள பஜாஜ் சர்வீஸ் சென்டரில் இலுமினாட்டி புகழ் பாரிசலனை சிலர் தாக்கியதாக அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தமிழர்கள்தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். உண்மையில் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் நடந்து என்ன என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இலுமினாட்டிகள் குறித்து உலகஅளவில் பேச்சுகள் இருந்து தான் வருகிறது. ஆனால் இதுவரை இலுமினாட்டிகள் என்பவர்கள் உண்மையில் இருக்கிறார்களா அல்லது இவை எல்லாம் ஒரு கட்டுகதையா என்பது தெளிவாக தெரியவில்லை.
தமிழக மக்கள் மத்தியில் இலுமினாட்டிகளை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் பாரிசாலன். கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களிலும் இவர் இலுமினாட்டிகள் குறித்து பேசிவிட்டார். இவரது பேச்சை கேட்டு சிலர் இவரை அறிவாளி வித்தியாசமாக யோசிப்பவர் என்றும் பலர் இவரை பார்த்து கிண்டலடித்தும் வருகின்றனர்.
இவர் தமிழகத்தில் உள்ள கமல், ரஜினி முதல் சில யூ டியூப் சேனல்களை கூட இலுமினாட்டிகள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெளியானபோதும் அதன் லோகோவை பார்த்து இது இலுமினாட்டிகளின் லோகோ என்று பேசக்கூடிய அளவிற்கு இலுமினாட்டிகள் என்ற கான்செப்டை இவர் மக்கள் மத்தியில் இறங்கவிட்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாரிசாலன் வேலூரில் உள்ள ஒரு பஜாஜ் ஷோரூம் முன்பு நின்று தன் வாயில் ரத்த காயத்துடன் செல்பி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் தன் பைக்கை வேலை பார்க்க விட்டிருந்ததாகவும்.
அப்பொழுது அவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இவரை தாக்கியதாகவும் இதில் தான் காயமுற்றதாகவும், அந்த நிறுவனம் ஒரு தெலுங்கு கார்கள் நிறுவனம் எனவும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இவரின் இந்த பதிவை இன்டர் நெட்டில் பலர் கிண்டலடிக்க துவங்கி விட்டனர். பலர் மீம்கள் போட்டு இவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஒரு செல்பி வீடியோ வெளியிட்டார் அதில் தான் முந்தைய வீடியோவில் அது ஒரு தெலுங்கு காரரின் நிறுவனம் என சொல்லிருந்தது தவறான தகவல் இவர்கள் மார்வாடிகாரர்கள் என பதிவிட்டிருந்தார்.
இதற்கும் நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்தனர். சிலர் இவருக்கு ஆதரவாகவும் பதிவுகளை செய்திருந்தனர். அவர்களில் சிலர் இலுமினாட்டிகளுக்கு எதிராக பாரிசாலன் பேசி வருவதால், அவரை தாக்கியது இலுமானாட்டிகளின் ஆட்கள் தான் எனவும், இது இலுமினாட்டிகளின் சதி எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரி சாலன் தனது பைக்கை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சர்வீஸ் விட்டிருந்தார். அவர்கள் இரண்டு வாரங்களாக சர்வீஸ் செய்து பைக்கிற்கு 7 ஆயிரம் ரூபாய் பில் செய்தனர்.
பைக் புதிய பைக் என்பதால் வாரண்டி கொடுக்கும் படி அவர் கோரியிருக்கிறார். அவர்கள் வாரண்டி தரமுடியாது என கூறியதால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சிலர் அவரை தாக்கினர். என பாரிசாலன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இது குறித்து பஜாஜ் நிறுவனம் அறித்த விளக்கமானது கடந்த மே 26ம் தேதி பாரி சாலன் தனது பைக்கை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு வந்தார். அவரது பைக்கின் இன்ஜின் பிரச்னை என சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு சென்றார். அவரது பைக்கின் இன்ஜின் ஆயிலை வெளியில் எடுத்து பார்த்த போது இது இந்த பைக்கிற்கு ஏற்ற கிரேடு இன்ஜின் ஆயில் இல்லை.
பொதுவாக பைக்கிற்கு ஏற்ற கிரேடில் உள்ள இன்ஜின் ஆயிலை போடாவிட்டால் இன்ஜினிற்குள் உராய்வு தன்மை அதிகமாகி அதிக சூடாகும். இதனால் இன்ஜிற்கு அதிக பாதிப்பு ஏற்படும் இது தான் நடந்தது. இதை அவரிடம் தெரிவித்து அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கூறிவிட்டு அவரின் ஒப்புதலுடன் தான் பைக் சரி செய்தோம்.
இந்நிலையில் பைக்கை ரிப்பேர் செய்ததற்கான செலவு ரூ 7000 ஆகியிருந்தது. அதற்கான சரியான விபரங்கள் எங்களிடம் உள்ளது. அவர் திருப்பி வாங்க வந்த போது ரூ 7000 மிக அதிகம் என கூறி எங்களிடம் வாக்கு வாதம் செய்தார். மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
தொடர்ந்து எங்களது வாக்குவாதம் முற்றுகையில் பாரிசாலன் எங்கள் நிறுவன ஊழியர் ஒருவரை தாக்கினார். அதற்கு பதிலுக்கு தான் நாங்கள் அவரை அடித்தோம். இந்த அத்தனை காட்சிகளும் எங்களது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது அந்த காட்சிகளை போலீசில் ஒப்படைத்துள்ளோம். போலீசில் அவர் மீது புகார் கொடுத்துள்ளோம். தற்போது இது விசாரணையில் உள்ளது. தனிப்பட்ட பிரச்னையை அவர் எப்படி தமிழர் - தெலுங்கர்- மார்வாடி பிரச்னையாக பார்க்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறினர்.
எது எப்படியோ இந்த வழக்கு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளது. அவர்கள் தகுந்த ஆதாரங்களை வைத்து தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பர் என நாம் நம்பலாம். அதே நேரத்தில் உண்மையில் இன்ஜின் ஆயலை வேறு கிரேடு ஆயலை ஊற்றினால் என்ன ஆகும் தெரியுமா?
பொதுவாக இன்ஜின் ஆயில்கள் பல விதமான கிரேடுகளில் இருக்கிறன்றன. இந்த கிரேடு என்பது ஆயிலின் தன்மையை குறிக்கும். குறிப்பாக 0W20, 0w40,5w30,5w40, 15w40 என பல விதமான கிரேடு ஆயில்கள் மார்க்கெட்டில் உள்ளன.
இப்பொழுது 5w40 இது எதை குறிக்கிறது என்றால் இதில் உள்ள w என்பது வின்டர் என்ற அர்த்தத்தை குறிக்கும். அந்த w என்ற வார்த்தை முன்புறம் உள்ள என் குறைந்த பட்ச வெப்பத்தையும் w என்ற வார்த்தைக்கு அடுத்துள்ள எண் அதிக பட்ச வெப்பத்தையும் குறிக்கிறது.
அதாவது இந்த ஆயில் குறைந்த பட்ச வெப்பதற்திற்கும் அதிகபட்ச வெப்பத்திற்கும் இடைப்பட்ட வெப்ப நிலையில் தான் சரியான லுப்ரிகென்டாக இயங்கும். குறைந்த பட்ச வெப்பத்திற்கும் குறைவாக வெப்பம் இருந்தால் ஆயில் உறைந்து விடும்.
அதே போல் அதிக பட்ச வெப்பத்திற்கு அதிகமான வெப்பம் ஏற்பட்டால் ஆயில் தின் ஆகி சரியாக வேலை செய்யலாமல் அதிக உராய்வு ஏற்பட காரணமாகி விடும். இதனால் வாகன தயாரிப்பார்கள் பரிந்துரைக்கும் ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்கள் இன்ஜினில் ஏற்படும் வெப்பத்தை அளவிட்டு அதற்கு தகுந்த கிரேடை தான் பரிந்துரைப்பர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!