Just In
- 34 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மும்பை விமானத்தில் பயணிகளுக்கு மூக்கு வழியாக ரத்தம் வந்த சம்பவம்... உண்மை காரணம் இது தான்..!
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு கேபின் பிரஷர் குறைவு காரணமாக மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்தது. விமானி செய்த சிறிய தவறால் தான் இந்த சம்
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு கேபின் பிரஷர் குறைவு காரணமாக மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்தது. விமானி செய்த சிறிய தவறால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? கேபின் பிரஷர் என்றால் என்ன? இதற்கு பின்னால் உள்ள தொழிற்நுட்பம் என்ன வாருங்கள் இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூரை நோக்கி 9W697 என்ற விமானம் சுமார் 166 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டது. இது போயிங் 737 ரக விமானம். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தின் உள்ளே கேபின் பிரஷர் குறைந்தது. இதனால் பயணிகள் பலர் அவதிப்பட்டனர்.
சிலருக்கு மூக்கு, காது வழியாக ரத்தம் வழிய துவங்கியது. பலருக்கு காது வலி ஏற்பட்டது. எனவே உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க்கை விமானி திறந்து விட்டார். அத்துடன் அந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே எமர்ஜென்ஸியாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த 166 பயணிகளும், 5 ஊழியர்களும் பத்திரமாக தரையிறங்கினர். இது குறித்து விசாரணை நடந்த போது, விமானி கேபின் பிரஷரை கட்டுப்படுத்தும் சுவிட்சை ஆன் செய்ய மறந்து விட்டார் என்பதும், அதனால்தான் விமானத்தில் கேபின் பிரஷர் இல்லாமல் போனதும் தெரியவந்தது.
விமானி செய்த சிறு தவறால் விமானத்தில் இருந்த ஒட்டுமொத்த பயணிகளுக்கும் பெரும் அவதி ஏற்பட்டது. அப்படி என்றால் விமானத்தில் கேபின் பிரஷர் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா? கேபின் பிரஷர் என்றால் என்ன? கேபின் பிரஷர் குறைந்ததால், பயணிகளின் காது மற்றும் மூக்குகளில் ரத்தம் வழிந்தது ஏன்? என்பதற்கான விடைகளை கீழே பார்க்கலாம்.
நம் பூமியில் இருக்கும் போது தேவையான அளவிற்கு ஆக்ஸிஜன் இருக்கிறது. அதனால் நாம் சுவாசிப்பதற்கு சிரமம் இருக்காது. ஆனால் மலை பிரதேசங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என நாம் கேள்விபட்டிருப்போம் அது போல தான் இதுவும்.
பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே போகும். குறைவான காற்று அழுத்தத்தால் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் பிரிந்து செல்லும். இதனால் சுவாசிப்பதற்கு சிரமமாக இருக்கும்.
பொதுவாக இந்த காற்றின் அழுத்தம் கடல் மட்ட பகுதிகளில் சீராக இருக்கும். மேலே செல்ல செல்ல ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கொண்டேதான் இருக்கும். இதனால்தான் மலை பிரதேசங்களில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மலை பிரதேசங்களிலேயே சுவாசிக்க சிரமம் ஏற்பட்டால் விமானம் பறக்கும் உயரத்தில் பிரஷர் மிகவும் குறைவாகதான் இருக்கும். இந்த இடங்களில் மனிதனால் உயிர் வாழவே முடியாது. இவ்வாறு ஆக்ஸிஜன் காற்றில் இருந்து குறைந்தால் உடலில் ரத்த ஒட்டங்களில் மாற்றம் ஏற்படும்.
மலை பிரதேசங்களிலேயே சுவாசிக்க சிரமம் ஏற்பட்டால் விமானம் பறக்கும் உயரத்தில் பிரஷர் மிகவும் குறைவாகதான் இருக்கும். இந்த இடங்களில் மனிதனால் உயிர் வாழவே முடியாது. இவ்வாறு ஆக்ஸிஜன் காற்றில் இருந்து குறைந்தால் உடலில் ரத்த ஒட்டங்களில் மாற்றம் ஏற்படும்.
இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடலில் உள்ள காது, மூக்கு போன்ற துவாரங்கள் வழியாக ரத்தம் வெளியேற முற்படும். இதன் காரணமாகவே விமானத்தில் இருந்த பலருக்கு காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வரத்துவங்கியது.
பொதுவாக விமானங்களில் கேபினிற்குள் பிரஷரை கட்டுப்பாடுடன் வைத்திருக்க சில தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்டவுடன் கேபினிற்குள் வரும் காற்றையும், கேபினில் இருந்து வெளியேறும் காற்றையும் கட்டுப்படுத்தும் கருவி இயக்கப்படும்.
இந்த கருவி இயக்கப்பட்டவுடன் கேபினிற்குள் காற்றின் அளவு சீராக இருக்கும். விமானம் பறக்கும் போது வெளியில் எவ்வளவு குறைவான காற்றின் அழுத்தம் இருந்தாலும் கேபினிற்குள் காற்றின் அழுத்தம் குறையாமல் இருக்கும்.
பொதுவாக விமானம் பறக்கும் போது, கேபினிற்குள் பிரஷரை கட்டுப்படுத்தும் கருவி பழுதானாலோ அல்லது விமானத்தின் கதவு சரியாக அடைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது விமானத்தில் உள்ள ஜன்னல்களில் ஓட்டை இருந்தாலோ இந்த பிரச்னை ஏற்படலாம்.
ஆனால் நேற்று மும்பையில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை விமானி கேபின் பிரஷரை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கவே மறந்துவிட்டார். பொதுவாக இந்த கருவியானது, விமானத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு விமானம் புறப்பட தயாராக இருக்கும் போது இயக்கப்படும். பின் விமானம் தரையிறங்கியதும்தான் இதன் இயக்கம் நிறுத்தப்படும்.
விமானம் பறக்கும்போது இந்த கருவியை இயக்க துவங்க கூடாது. ஏன் என்றால் இந்த கருவி இயங்க துவங்கும்போது கேபினிற்குள் என்ன பிரஷர் இருந்ததோ அதே பிரஷர்தான் விமான பயணம் முழுவதிலும் நீடிக்கும்.
அதனால் விமானம் பறக்கும் போது இந்த பிரஷரை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கினால் குறைந்த பிரஷரே காற்றில் இருக்கும். இதனால் விமானிகள் விமானத்தை இயக்கும் முன் கண்டிப்பாக கேபின் பிரஷர் கருவியை இயக்க வேண்டியது முக்கியம்.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!