ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ரயில் பயணங்களின்போது ரயில் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அசந்து தூங்கிவிட்டால் என்ன நடக்கும். ரயில் விபத்தை சந்திக்குமா? அல்லது வேறு என்ன நடக்கும்? என்பது தொடர்பான முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

என்னதான் விமானம், சொகுசு பேருந்துகள் என போக்குவரத்திற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், இந்தியாவில் குறைந்த செலவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ரயில்தான்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

இதில் பயணம் செய்யும் அனுபவமே தனி தான். இப்படியாக நீண்ட தூரம் பயணம் செய்ய பலர் ரயிலையே தேர்வு செய்வார்கள். செலவானாலும் பரவாயில்லை விமானத்தில் பயணம் செய்யலாம் என்றால் இன்று இந்தியாவில் பல நகரங்களில் விமான நிலையங்களே இல்லை.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

இந்நிலையில் ரயில் மட்டுமே சிறந்த தீர்வு. இந்நிலையில் நீண்ட தூர ரயில் பயணம் எல்லாம் பெரும்பாலும் இரவு நேர ரயில் பயணமாகவே இருக்கிறது. இரவில் ரயிலில் ஏறி பகலில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் படி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியாக இரவு நேர பயணம் என்றால் ரயிலில் முன்பதிவு செய்து செல்பவர்கள் ஸ்லீப்பரில் படுத்து தூங்கிக்கொண்டே பயணம் செய்ய முடியும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ஒரே ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள். ஆனால் இந்த ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பும் ரயிலை ஓட்டும் லோகா பைலட் மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் ஆகிய இருவரின் கையில் தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய ரயிலாக இருந்தாலும் இருவர் தான் அதை இயக்க முடியும். இரவு முழுவதும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில் செல்லும் போது இவர்கள் எப்படி பணியாற்றுவார்கள் என நாம் எல்லோருக்கும் யோசித்துக்கொண்டிருப்போம் அதை பற்றி காணலாம் வாருங்கள்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

பொதுவாக ஒரு ரயிலை இன்ஜினிலிருந்தும் ஒருவர் கார்டாகவும் இயக்குவார்கள். இதில் இன்ஜினிலில் இருப்பவர் லோகோ பைலட் எனவும் மற்றவர் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் எனவும், பின்னால் இருப்பர் கார்டு எனவும் அழைக்கப்படுவார்கள். இதில் 3 பேருமே ரயில் பயணித்தின் போது தூங்க முடியாது. முழு நேரமும் விழிப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுடனேயே இருக்க வேண்டும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ரயில்வே விதிகளின் படி ரயில் இன்ஜினை இயக்குபவர்களுக்கு மாதத்தில் 4 முறை 30 மணி நேர ஓய்வு அல்லது 5 முறை 22 மணி நேர ஓய்வு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இது போக ஒரு ரயிலிலிருந்து மற்றொரு ரயிலுக்கு மாறும் இடைவெளியில் அவர்கள் ஓய்வெடுக்க இடம் வழங்கப்பட வேண்டும் இது தான் ரயில் வவே நடைமுறை.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

தற்போது இந்தியாவில் ஓடும் 19 ஆயிரம் ரயில்களுக்கு 60 ஆயிரம் லேகோ டிரைவர்கள் இருக்கிறார்கள். அதாவது லோகோ டிரைவர்களுக்கு இந்தியாவில் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் பல நேரங்களில் லோகோ பைலட்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

லோகோ பைலட்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் இரவு நேரங்களில் பயணங்களில் போது தூங்கம் வரத்தான் செய்யும். ஆனால் இதை தடுக்க தொழிற்நுட்ப வசதி ஒன்று ரயில் இன்ஜின் ஒன்றில் செய்யப்பட்டுள்ளது. ரயில் இன்ஜின்கள் கிட்டத்தட்ட 3000 முதல் 6000 குதிரை திறனில் இயங்கும் சக்தி வாய்ந்தது. ஒட்டு மொத்த ரயிலும் கிட்டத்தட்ட 140 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ரயில்களில் vcd (Vigilance Control Device) என்ற கருவி இருக்கிறது. இந்த கருவி ரயில் உள்ள ஹாரன், மணல் ஆப்ரேஷன், த்ராட்டல், பிரேக் ஆகியவைற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருவி ஒவ்வொரு 60 நொடிக்கு முறை ரிசெட் செய்யும் பட்டனும் இந்த கருவியில் இருக்கும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ரயில் ஓட்டுநர்கள் ரயலை இயக்கும் போது மேல குறிப்பிட்ட ரயிலில் உள்ள ஏதாவது ஒரு கருவியை இயக்க வேண்டும். அப்படி அது இயக்கப்பட்டு 60 நொடிகள் வரை இது அடுத்த கருவியின்இயக்கத்திற்காக எதிர்பார்க்கும். 60 நொடிக்குள் இந்த கருவி இயக்கப்பட்டால் இந்த மீண்டும் அடுத்த 60 நொடிக்கு டைமர் ஓடிவிடும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ஒருவேளை இப்படியாக எந்த விதமாக கருவியையும் இயக்க வேண்டிய அவசியம் இல்லை ரூட் கிளயராக இருக்கிறது. தொடர்ந்து செல்லாம் என்ற நிலையில் இந்த கருவியை ரீசெட் செய்யும் பட்டன் இருக்கும் அந்தபட்டனை இயக்க வேண்டும். இந்த கருவியுடன் இணைக்கப்பட்ட எல்லா கருவிகளும் லோகோ பைலட்களால் மேனுவலாக மட்டுமே இயக்கப்படும் கருவிகள் என்பதால் இதுஇயக்கத்தில் இருந்தால் லோகோ பைலட்கள் தூங்காமல் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ஒருவேலை 60 நொடிக்கும் எந்த கருவியும் இயக்கப்படவில்லை என்றால் அடுத்த 5 நொடிக்கு அதிலிருக்கும் எச்சரிக்கை விளக்கு எரியும். ஒரு வேளை லோகோ டிரைவர்கள் முழிப்புடன் இருந்து மறதியில் இருந்தால் இதை எச்சரிக்கை விளக்கை பார்த்ததும் அந்த கருவியை ரீசெட் செய்யும் பட்டனை இயக்குவார்கள். ஒருவேளை அவர்கள் தூங்கிவிட்டால் அல்லது எச்சரிக்கை விளக்கை கவனிக்கவில்லை என்றால் உடனடியாக சத்தம் எழுப்பும் அலாரம் இயங்க துவங்கும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

இது ஒரு வேலை லோகோ பைலட்கள் தூங்கிவிட்டால் அவர்களை இந்த சத்தம் எழுப்பி விடும். ஆனால் இதுஎல்லாம் 76 நொடிகள் வரை தான். அப்படி அந்த சத்தம் கேட்டும் அவர் எழும்பவில்லை ரயிலில் பின்னால் இருக்கும் கார்டிற்கு இது குறித்து தகவல் செல்லும் பின்னர் உடனடியாக ரயிலில் எமர்ஜென்ஜி பிரேக் இயக்கப்படும். இதனால் ரயில் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் ரயில் நின்றுவிடும்.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

ரயில் நின்றதும் லோகோ பைலட்கள் மீண்டும் ரயிலை இயக்க தானாக இன்ஜினை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும். இந்த கருவி விபத்தை தடுப்பதற்காக ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது இன்று செயல்பாட்டில் இருக்கும் எல்லா விதமான ரயில் இன்ஜின்களிலும் இருக்கும். இது போக தற்போது புது தொழிற்நுட்பமாக கவச் என்ற தொழிற்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

அதன்படி இந்த தொழிநுட்பம் மற்ற ரயில்களுடன் தொடர்பு கொண்டு ரயில் விபத்துக்களை நிகழ விடாமல் எதிரே வேறு யில் வந்தாலோ அல்லது வேறு ரயில் சென்று கொண்டிருந்தாலோ தானாக ரயிலை நிறுத்திவிடும் இந்த தொழிற்நுட்பம் தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் பல ரயில்களுக்கு வரவில்லை. இது வந்துவிட்டால் ரயில்கள் விபத்தே நடக்காது.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

மற்றபடி ரயிலை ஓட்டும் லோகோ பைலட்கள் அல்லது அசிஸ்டெண்ட் லோகோ பைலட்கள் ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்க அனுமதியில்லை. இது மட்டுமல்ல ரயிலை நிறத்திவிட்டு டீ குடிக்க, சிகெரெட் பிடிக்க, கழிப்பறைய பயன்படுத்தவும் அனுமதியில்லை. சில ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிப்பறை வசதி இருக்கிறது. அந்த ரயில் ஓட்டுநர்கள் மட்டும் ரயில் ஸ்டேஷனில் நிற்கும் போது பயன்படுத்திக்கொள்ள அனுமதியிருக்கிறது.

ரயிலில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாருமே கேள்விபட்டிருக்க மாட்டீங்க!

இது மட்டுமல்ல ரயில் ஓட்டுநர்கள் தங்களுக்கு நியமித்த டூட்டியை நேரமாக கணக்கிடக்கூடாது. உதாரணமாக அவர்கள் செல்ல வேண்டிய ரயில் நிலையத்திற்கு அவர்கள் டூட்டி நேரத்திற்குள் செல்ல முடியவில்லை என்றால் ரயிலை பாதியில் நிறுத்திவிட்டு செல்லக்கூடாது. அதே போல அடுத்த ரயில் நிலையம் வந்தால் அங்கும் நிறத்திவிட்டு செல்லக்கூடாது. பயணிக்க வேண்டிய ரயில் நிலையத்திற்கு சென்றால் தான் அங்கு தான் அவரை மாற்றிவிட வேறு பைலட் காத்துக்கொண்டிருப்பார். அது வரை சென்றால் மட்டுமே அவருக்கு டூட்டி முடிந்ததாக கணக்கு இங்கு நேரம் பார்க்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 2, 2022, 14:42 [IST]
English summary
What is vigilance Control device in train locomotive engine how it is working get full report here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+