யாரோ அடிச்சு விட்றத நம்பாதீங்க... விமானம் கிளம்பும் முன் ஏன் புகை வருகிறது தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
விமானங்கள் கிளம்பும் முன்பு விமானத்திற்குள் புகையாக வருகிறது ஏன் தெரியுமா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

நீங்கள் இதற்கு முன்பு விமானத்தில் பயணித்திருக்கிறீர்களா? விமானத்தில் பயணித்த பலர் விமானம் கிளம்பும் முன்பு விமானங்களில் கதவுகள் அடைக்கப்பட்ட பின்பு விமானத்திற்குள் புகை போல ஒன்று பரவும் இது என்ன? என்பதை பற்றித்தான் இங்கே காணப்போகிறோம்.

இந்த புகை போல வருவதற்குக் காரணம் விமானத்தின் ஏசித் தான் இது விமானத்திற்கும் காற்றை பிரஷரைஸ் செய்யும் போது ஏசி ஆன் செய்யப்படும் அதிலிருந்து அதிகமாக குளிர்ந்தகாற்று வரும் இதனால் தான் இந்த புகை போன்ற ஒரு விஷயம் ஏற்படுகிறது.

விமானம் தரையில் நிறுத்தப்பட்டு சரக்கு அல்லது பயணிகளை ஏற்றுவதற்காக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தின் வெளியே உள்ள காற்று விமானத்திற்குள் வரும். பொதுவாக விமானத்திற்கு வெளியே சூடான காற்று இருந்தால் இது விமானத்திற்குள்ளும் வந்து விமானத்திற்குள் உள்ள வெப்பத்தை அதிகரித்திருக்கும்.

இந்நிலையில் விமானம் கிளம்பும் முன்பு விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டும். அதன் பின்னர் விமானி விமானத்தை பிரஷரைஷ் செய்வார்கள். விமானம் மேலே பறக்கும் போது காற்றழுத்தம் குறைவது காரணமாகப் பயணிகளின் காது மூக்கு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க விமானத்திற்குள் சீரான காற்றின் அழுத்தம் இருக்க இதைச் செய்வார்கள்.

இதற்காக விமானத்தின் ஏசியை பயன்படுத்துவார்கள். காற்றின் பிரஷர் அதிகமாக இருந்தால் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் ஏசியின் மூலம் குளிர்ந்த காற்றை நிரம்புவார்கள், இப்படியாகச் செய்யும் போது ஏசியிலிருந்த குளிர்ந்த காற்று வெளியாகும். ஆனால் விமானத்திற்கும் வெப்பமான காற்று இருக்கும். இதனால் இந்த இரண்டும் இணையும்போது சிறிய நீர்த் துளிகளாக உருவாகும்.

இந்த நீர் துளிகள் ஏசிலிலிருந்து வெளியேறும் காற்று காரணமாக நகரும். அது அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் அந்த இடத்தை அடுத்த வெப்பமான காற்று நிரப்பும் பின்னர் அது நீர்த்துளியாக மாறும். இந் செயல்பாடு விமானத்திற்குள் இருக்கும் கேபின் வெப்பம் குறிப்பிட்ட அளவு வரும் வரை நடக்கும்.

இப்படியாக நீர்த் துளிகள் தான் மிகச் சிறிய அளவில் உருவாவதால் புகை போல காட்சியளிக்கிறது. பின்னர் இது காற்றுடன் காற்றாகக் கலந்து விடும். இதுதான் விமானம் கிளம்பும் முன்பு புகை போன்ற விஷயம் வருவதற்கான முக்கியமான காரணம்.

எல்லா நேரங்களிலும் இது போன்று புகை வராது வெளியில் உள்ள வெப்பம் அதிகமாக இருந்தால் மட்டுமே வரும். கோடைக் காலங்களில் அதை அதிகம் காணலாம். குளிர் காலங்களில் மிக லேசாகப் புகை வரும். சில நேரங்களில் கண்ணிற்கே தெரியாத அளவிற்குப் புகை இருக்கும்.

இது தெரியாமல் பலர் இதை கெமிக்கலை பரப்புகின்றனர். மருந்தைப் பரப்புகின்றனர் எனப் புரளிகளைக் கிளப்புகின்றனர். உண்மையில் இது வெறும் காற்று தான். இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








