நீங்கள் கார் பைக் ஓட்டுவதால் உங்கள் எதிர்காலத்தை அழிக்கிறீர்கள் என சொன்னால் நம்ப முடிகிறதா?
இந்த உலகம் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக நெட்0 என்ற டார்கெட்டை நோக்கி இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

தற்போது உலகில் உள்ள பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது பருவ நிலை மாற்றம் தான். நாம் பயன்படுத்தும் பொருள்களால் வெளியேறும் கழிவுகள் இந்த இயற்கையை மாசுபடுத்தி அதன் தன்மையை மாற்றி வருகிறது. அதனால் இந்த உலகம் தனது இயல்பையும் மாற்றி வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது. மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். எதிர்காலத்தில் இதனால் மனிதர்கள் வாழ்வதற்கே மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஐநாசபை 197 நாடுகள் கொண்ட கூட்டமைப்பைப் பருவ நிலை மாற்றத்திற்காக அமைத்தது. இந்த கூட்டத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த உலகில் கார்பன் எமிஷன் என்ற விஷயமே இல்லாமல் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதற்காக ஒவ்வொரு நாடும் அதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஒவ்வொரு நாடும் தங்கள் கொண்டு வரும் திட்டம் அல்லது மேம்பாட்டில் எப்படியாவது கார்பன் எமிஷனை குறைக்க என்ன வழிகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதன் படி ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட ஆண்டிற்குள் அந்நாட்டில் கார்பன் எமிஷன் என்பதே இருக்காது என்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது.

அதன்படி இங்கிலாந்தில் வரும் 2050 ஆண்டு முதல் நெட் பூஜ்ஜியம் என்ற அளவில் எமிஷன் இருக்கும் என அதாவது எவ்வளவு எமிஷன் ஆகிறதோ அதற்குத் தகுந்தார் போது அதை நியூட்டிரலைஸ் செய்யும் விஷயத்தையும் செய்வோம் என அந்நாடு அறிவித்துள்ளது.இந்தியா இதே நெட் பூஜியம் எமிசனை வரும் 2070 ம் ஆண்டில் அடையும் எனத் தெரிவித்துள்ளது.

சரி இதற்கும் ஆட்டோமொபைலுக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த பூமியில் எமிசனை அதிகரிப்பதில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. சாலைகளில் ஓடும் கார் பஸ், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் எமிசன் என்பது ஒட்டு மொத்தமாக எனர்ஜி மூலம் வெளியேறும் கார்பன் 23 சதவீதம் இருக்கிறது. இதுவுமே ஒட்டுமொத்த உலகில் வெளியாகும் கார்பன் எமிஷனில் 18 சதவீதம் இருக்கிறது.

அதனால் உலகில் கார்பன் எமிஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஆட்டோமொபைல் மூலம் வெளியாகும் கார்பன் எமிசன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியில் தான் உலக நாடுகள் அனைத்தும் இறங்கியுள்ளது. வாகனங்களிலிருந்து வெளியாகும் மாசுவை குறைக்க மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்க வேண்டும்.

அதாவது பேட்டரியில் இயங்கும் வாகனம், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதன் மூலம் குறைக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக இந்த தொழிற்நுட்பங்களில் இயங்கும் வானகங்களின் விலை அதிகமாக இருக்கிறது. மேலும் இதற்கு தற்போது போதுமான சார்ஜிங் கட்டுமானங்கள் இல்லை.

அதனால் தற்போது உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கைவிட்டுவிட்டு உடனடியாக எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று எரிசக்தி வாகனங்களுக்கு மக்கள் மாறுவது என்பது பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. இது மட்டுமல்ல மக்கள் உடனடியாக பெட்ரோல்/டீசல் வாகனங்களைக் கைவிட்டுவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறினால் பல தொழிலாளர்கள் வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கே பிரச்சனை ஏற்படலாம்.

இது மட்டுமல்ல வெறும் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பது மட்டும் கார்பன் எமிஷனிற்கு தீர்வாகாது. உதாரணமாக உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான சார்ஜிங் ஸ்டேஷன் டீசல் ஜெனரேட்டர் மூலம் பவர் எடுத்தால் எப்படி இருக்கும்? அதற்கு நீங்களே டீசல் வாகனத்தை ஓட்டலாம் அல்லவா இதையும் நாம் யோசிக்கவேண்டும்.

இதனால் கார்பன் எமிஷனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க வேண்டும். ஆனால் இதற்குத் தேவையான தொழிற்நுட்ப வசதிகள் இதுவரை இல்லை. இதனால் இதற்காக நடக்கும் ஆய்வுகளைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து பெட்ரோல்/டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








