ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆம்புலன்ஸ்களில் எச்சரிக்கை விளக்குகளை அணைப்பதில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

அவசர சூழல்களில் ஆம்புலன்ஸ்களில் உள்ள எச்சரிக்கை விளக்குகள் ஆன் செய்யப்படும். இதன் மூலமாக ஆம்புலன்ஸ் வருவதை சாலையில் பயணிக்கும் மற்ற அனைவரும் தெரிந்து கொண்டு வழி விடுவார்கள். ஆம்புலன்ஸ்களில் எப்போதெல்லாம் எச்சரிக்கை விளக்குகளை ஆன் செய்வார்கள்? என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் எப்போதெல்லாம் எச்சரிக்கை விளக்குகளை அணைப்பார்கள்? என்பது பலருக்கும் தெரியாது. ஆம்புலன்ஸ்களில் எச்சரிக்கை விளக்குகளை அணைப்பதில் நிறைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் உங்களுக்காக நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக அவசர சூழல் முடிவுக்கு வந்து விட்டாலோ அல்லது ஒரே இடத்தில் ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் நிற்க வேண்டியதாக இருந்தாலோ எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்படும். அவசர சூழல் இல்லை என்றால், எச்சரிக்கை விளக்குகளுக்கு வேலையில்லை. எனவே அவசர சூழல் முடிவுக்கு வந்த உடனே எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்பட்டு விடும்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

அவசர சூழல் முடிவுக்கு வந்து விட்டது என்பது 2 முக்கியமான காரணங்கள் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. நோயாளி அபாய கட்டத்தை தாண்டி விட்டால், அவசர சூழல் முடிவுக்கு வந்து விட்டது என்று கருதப்படும். அதாவது ஒரு சில சமயங்களில் நோயாளிகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பார்கள். அப்போது துணை மருத்துவர்கள், அவர்களை காப்பாற்ற முழு முயற்சி எடுப்பார்கள்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன் ஒரு பகுதியாக சிபிஆர் (CPR - Cardiopulmonary Resuscitation) சிகிச்சை மேற்கொள்ளப்படும். மார்பு பகுதியை அழுத்துவது, வாயோடு வாய் வைத்து உயிரை காப்பாற்ற முயல்வது போன்ற சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும். இதுபோன்ற சிகிச்சைகள் மூலமாக நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

நோயாளி மீண்டும் சுய நினைவிற்கு திரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால், மருத்துவ ரீதியில் அதனை 'அவசரம்' என்பதில் இருந்து 'அவசரம் இல்லை' என வகைப்படுத்துவார்கள். இத்தகைய சூழல்களில் ஆம்புலன்ஸ்களின் எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்படும்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒருவேளை ஆம்புலன்ஸிலேயே நோயாளி உயிரிழந்து விட்டாலும் கூட, அவசர சூழல் முடிவுக்கு வந்து விட்டது என்றே கருதுவார்கள். ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் துணை மருத்துவர்கள், நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு அத்தனை வழிகளிலும் முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு அப்பாற்பட்டு ஒரு சில சமயங்களில் நோயாளிகள் உயிரிழந்து விடுகிறார்கள்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

மூச்சு நின்று விட்டாலோ அல்லது இதயம் துடிப்பது நின்று விட்டாலோ சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்படும். இதுபோன்ற சூழல்களிலும் ஆம்புலன்ஸ்களில் எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்பட்டு விடும். ஆம்புலன்ஸ்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து, போக்குவரத்து நெரிசலை கடந்து அதிவேகமாக பயணிக்கின்றன.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில், அந்த ரிஸ்க் எடுக்கப்படும். ஆனால் நோயாளி உயிரிழந்து விட்டால், ரிஸ்க் எடுத்து அதிவேகத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையிருக்காது. இதனால்தான் ஆம்புலன்ஸிலேயே நோயாளி உயிரிழந்து விட்டால், எச்சரிக்கை விளக்குகளை அணைத்து விடுகின்றனர்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதற்கு அடுத்தபடியாக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும், ஆம்புலன்ஸ்களில் எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்படும். இதுபோன்ற சமயங்களில் இன்ஜினையே முற்றிலுமாக அணைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 15 நிமிடங்களுக்கும் மேல் காத்து கொண்டிருந்தால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதனை செய்வார்கள்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் மீட்பு பணிக்கு அதிக நேரம் ஆகும். இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று. எனவே நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு நேரம் வீணடிக்கப்படாமல் சரியான முறையில் செலவிடப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆம்புலன்ஸ்களின் எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் ஆம்புலன்ஸ் ஐட்லிங்கில் இருக்கும்போதும் எச்சரிக்கை விளக்குகள் அணைக்கப்படும். ஐட்லிங் நிலையில் ஆம்புலன்ஸ் இருக்கும்போது எச்சரிக்கை விளக்குகள் மற்றும் இன்ஜின் ஆன் செய்யப்பட்டு இருப்பது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயுக்கள் சைலென்சரில் இருந்து வெளியாகும்.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த வாயுக்கள் நச்சு தன்மை உடையவை. குறிப்பாக இந்த வாயுக்கள் கேபினுக்கு உள்ளே வர நேரிட்டால், நோயாளிகளுக்கு பாதிப்பு மேலும் அதிகமாகும். எனவே ஐட்லிங்கில் இருக்கும்போது இன்ஜின் உடன் எச்சரிக்கை விளக்குகளையும் முற்றிலுமாக அணைத்து விடுவார்கள். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் காற்றை மாசுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த தவறை செய்தால், ஆம்புலன்ஸ் நிறுவனம் அல்லது ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர மருத்துவமனையை நெருங்கி விட்டால் எச்சரிக்கை விளக்குகளை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 'டிம்' செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் ஒளி மாசுபாட்டை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

ஆம்புலன்ஸில் நோயாளி இறந்து விட்டால் எச்சரிக்கை விளக்கு அணைக்கப்படுமா? இந்த உண்மைகளை யாரும் சொல்ல மாட்டாங்க!

மருத்துவமனையை நெருங்கி விட்ட சூழல், அவசர கால வாகனங்கள் தேவையில்லாத கவனத்தை பெறுவது நல்லதல்ல. அத்துடன் மற்ற நோயாளிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுவது அனுமதிக்கப்படாது. எனவே மருத்துவமனையை நெருங்கி விட்டால், ஆம்புலன்ஸ்களில் எச்சரிக்கை விளக்குகள் 'டிம்' செய்யப்பட்டு விடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
When Do Ambulance Emergency Lights Turn Off? Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X