Just In
- 40 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- News
மறந்துடாதீங்க.. நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர் தான்! சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்
- Finance
கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... இந்த ஊர் பெண்கள் தான் டாப்
- Technology
Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சூப்பரான ஐடியா... விமான நிலையங்களை ஏன் ஏரிக்கு பக்கத்துல கட்றாங்க தெரியுமா? தண்ணீ எடுக்கன்னு நெனச்சராதீங்க!
விமான நிலையங்கள் ஏன் பெரும்பாலும் ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் கட்டப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் ஆயிரக்கணக்கான விமான நிலையங்கள் (Airports) இருக்கின்றன. இதில் பெரும்பாலான விமான நிலையங்கள் நீர் நிலைகளுக்கு அருகில்தான் அமைந்திருக்கும். அதாவது ஏரி (Lake) மற்றும் கடல் (Ocean) போன்ற நீர் நிலைகளுக்கு பக்கத்தில்தான் பெரும்பாலான விமான நிலையங்கள் கட்டமைக்கப்படும். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணங்களை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

விமான நிலையங்கள் மீது பொதுமக்கள் பலராலும் கூறப்படும் மிக முக்கியமான புகார்களில் ஒன்று சத்தம். எனவே விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பது மிகவும் சிரமமான காரியங்களில் ஒன்று. இந்த சத்தம் குறித்த புகார்களை குறைப்பதுதான், பெரும்பாலான விமான நிலையங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் கட்டமைக்கப்படுவதற்கான முதல் காரணம்.

விமானங்கள் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, தரையில் உள்ள மக்களுக்கு அவை அமைதியானவையாக இருக்கலாம். விமானங்கள் இந்த உயரத்தில் பறக்கும்போது, தரையில் இருக்கும் உங்களுக்கு சத்தம் கேட்காது. ஆனால் விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும் மற்றும் லேண்டிங் செய்யப்படும்போதும் கதையே வேறு.

இந்த இரண்டு சமயங்களிலும் விமானங்கள் மிகவும் குறைவான உயரத்தில் பறக்கும். அப்போது அதிக சத்தம் ஏற்படும். ஆனால் விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே கட்டமைக்கும்போது, விமானங்களுக்கும், தரையில் உள்ள மக்களுக்கும் இடையே ஒரு இயற்கையான தடை உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்தம் தொடர்பான புகார்கள் குறையும்.

விமானங்கள் சத்தம் உருவாக்குவதை நீர் தடுக்காதுதான். ஆனால் அது இடத்தை ஆக்கிரமித்து கொள்கிறது. இல்லாவிட்டால் அந்த இடத்தில் வீடுகளோ அல்லது அலுவலகங்களோ கட்டப்படும். இதனால் அதிக மக்கள் வசிப்பார்கள். இதன் காரணமாக சத்தம் தொடர்பான புகார்கள் அதிகளவு வரும். ஆனால் நீர் நிலைகளில் கட்டிடங்கள் இருக்காது.

எனவே அந்த சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். சத்தம் தொடர்பான புகார்களும் குறைவாகவே வரும். விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே அமைப்பதற்கு இது ஒரு காரணம் மட்டுமே. இதை விட மற்றொரு முக்கியமான காரணம் ஒன்றும் இதற்கு பின்னால் உள்ளது. அது பாதுகாப்பு.

விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே கட்டமைப்பதற்கு பாதுகாப்புதான் மிகவும் முக்கியமான காரணம். அதாவது விமானங்களில் இயந்திர கோளாறுகள் ஏற்படாது என உறுதியாக சொல்லவே முடியாது. அவற்றில் எப்போது வேண்டுமானாலும் திடீரென கோளாறுகள், பழுதுகள் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலைகள் மிகவும் அபாயகரமானவை.

விமானத்தில் திடீரென்று கோளாறுகள் ஏற்பட்டால், பைலட்களால் சரியாக டேக் ஆஃப் செய்ய முடியாமலோ அல்லது லேண்டிங் செய்ய முடியாமலோ போகலாம். இதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் அருகில் நீர் நிலைகள் இருக்கும்பட்சத்தில், பைலட்களால் பிரச்னையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதாவது நீர் நிலைகளில் அவர்கள் விமானத்தை இறக்கி விடுவார்கள்.

மலைகள் அல்லது கட்டிடங்களில் மோதுவதை விட, நீர் நிலைகளில் விமானத்தை இறக்குவது சிறந்த முடிவாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையங்களை ஒட்டியுள்ள பெரும்பாலான நீர் நிலைகள் ஆழமற்றதாகவே இருக்கும். அவசர சூழல்களில், விமானத்தை பாதுகாப்பாக லேண்டிங் செய்வதற்கு இந்த ஆழமற்ற நீர் நிலைகள் உதவி செய்கின்றன.

நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல், மலைகள் அல்லது கட்டிடங்களில் மோதுவதை காட்டிலும், ஆழமற்ற இந்த நீர் நிலைகளை தேர்வு செய்வது பாதுகாப்பான முடிவாக இருக்கும். எனவே விமான நிலையங்களுக்கு அருகே உள்ள நீர் நிலைகள் 'பேக்அப் சொல்யூசன்' ஆக கருதப்படுகின்றன. பெரும்பாலான விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே அமைப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!
-
என்ன சொல்றீங்க... விமானங்களுக்குச் சாவியே கிடையாதா? அப்ப எப்படி விமானத்தை ஸ்டார்ட் பண்ணுறாங்க?