Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க! ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா?
சைக்கிள்களில் ஆண்கள் சைக்களிலுக்கும் பெண்கள் சைக்கிளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம் ஏன் கொண்டு வரப்பட்டது? இதன் வரலாறு என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.
ஒரு மனிதனின் வாழ்வில் வாகனம் என்ற விஷயத்தை அவன் பிறந்தது முதல் இறப்பது வரை பயன்படுத்தும் விஷயமாக மாறிவிட்டது. குழந்தை பிறந்து நடை வண்டியில் பழகுவது முதல் பின்னர் சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார், ரயில், விமானம், கப்பல் என எல்லாவற்றிலும் முடிந்தளவுக்குப் பயணம் செய்துவிட்டு அவன் இறந்த பிறகு இறுதி பயணத்தையும் வாகனத்திலேயே சென்று முடிக்கிறான். அந்த அளவிற்கு வாகனம் மனிதர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயமாகிவிட்டது.
ஒரு மனிதன் தனியாக ஓட்டத்துவங்கும் முதல் வாகனம் சைக்கிள், சிறு குழந்தையாக இருக்கும் போது இருந்தே இந்த சைக்கிள் அவனுடன் பயணிக்கத் துவங்கிவிடுகிறது. எந்த ஒரு மோட்டாரின் பயன்பாடும் இல்லாமல் மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சைக்கிளில் பயணிக்கத் துவங்கினான். இன்று வளர்ந்து பெரியவர்களாக இருக்கும் நாமும் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய நினைவுகள் பல நம்மிடம் இருக்கும்.
அப்படியாகத் தமிழ்நாட்டில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான நினைவு வாடகை சைக்கிள் தான். பலரது வீட்டின் பொருளாதார சூழ்நிலை தன் குழந்தைகளுக்குச் சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அவர்களுக்காகவே அன்று சைக்கிளை வாடகைக்கு விடுவது என்பது ஒரு தொழிலாகவே நடந்து வந்தது. இன்று அப்படியான தொழிலே அழிந்துவிட்டது எனச் சொல்லிவிடலாம்.
சரி விஷயத்திற்கு வருவோம், சைக்கிள் ஓட்டி பலருக்குத் தெரியும் சைக்கிளில் இரண்டு வகையான சைக்கிள் இருந்தன. ஒன்று ஆண்களுக்கான சைக்கிள் மற்றொன்று பெண்களுக்கான சைக்கிள் இந்த இரண்டுமே மார்கெட்டில் விற்பனைக்கு இருந்தன. ஆண்களுக்கான சைக்கிளில் குறுக்கே ஒரு கம்பி இருக்கும். பெண்களுக்கான சைக்கிளில் இந்த கம்பி இருக்காது. இது தான் வித்தியாசம். இந்த பதிவில் இது குறித்துத் தான் விரிவாகக் காணப்போகிறோம்.
முதன் முதலில் சைக்கிளை அதிக அளவிலான விற்பனைக்காகத் தயாரிக்கப்பட்ட போது சைக்கிளின் பாகங்களை தனித்தனியாக வடிவமைத்து ஒன்றாகச் சேர்த்து விற்பனை செய்தனர். சைக்கிள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டிற்கு வந்த போது சைக்கிள்களை ஆண்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தத் துவங்கினர். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பான்மையான பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தனர்.
பின்னர் மெது மெதுவாகப் பெண்களும் வேலைக்குச் செல்ல துவங்கினர். ஆனால் பெண்கள் சைக்கிளை வாங்கி பயன்படுத்தத் தயங்கினர். அதற்கு முக்கியமான காரணம் சைக்கிளில் குறுக்கே இருந்த கம்பி தான் ஆண்கள் சைக்கிளில் ஏறும் போது கால்களைத் தூக்கி அந்த கம்பியைத் தாண்டி தூக்கிப் போட்டு எளிதாக ஏறி அமர்ந்தனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பயன்படுத்திய ஆடைகள் இதற்கு தோதுவாக இல்லை.
கால்களைத் தூக்கிப் போடும் போது பெண்களின் கால் பகுதி வெளியே தெரிந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது. இதனால் பெண்கள் சைக்கிள் ஓட்ட தயங்கினர். இதைத் தெரிந்து கொண்ட சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களுக்கான தனி சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்தனர். அப்பொழுது அவர்கள் குறுக்கே இருந்த கம்பி இல்லாமல் வடிவமைத்தனர். சைக்கிள் ஃபிரேமில் குறுக்கே கம்பி இருந்தால் தான் ஸ்டிராங்காக இருக்கும்.
அன்று தயாரிக்கப்பட்ட சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட மெட்டிரியல்கள் அவ்வளவு ஸ்டிராங்காக இல்லாததால் பெண்களுக்கான சைக்கிளை வடிவமைப்பதில் பல சிக்கல் இருந்தது. இருந்தும் வடிவமைக்கப்பட்ட சைக்கிளும் முதலில் வடிவமைக்கப்பட்ட சைக்கிளில் அளவிற்கு ஸ்டிராங்காக இல்லை. இருந்தாலும் பெண்களுக்கான சைக்கிள் மார்கெட்டில் வெற்றி பெற்றது.
பெண்கள் சைக்கிளை ஆண்களைப் போல ரஃப்பாக பயன்படுத்துவதில்லை. அதனால் அவர்களுக்கு அந்த அளவிற்கு ஸ்டிராங்கான சைக்கிள் தேவைப்படவில்லை. இதனால் மார்கெட்டில் பெண்களுக்கான சைக்கிள் வெற்றி பெற்றது. இதனால் இன்றும் மார்கெட்டில் பெண்களுக்கான சைக்கிளில் நடுவே கம்பி இல்லாமலேயே செய்கின்றனர். ஆனால் இன்று பெண்களின் ஆடைகள் மாறிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் சைக்கிளின் நடுவே கம்பியிருந்தாலும் பெண்கள் பெரிய அளவில் கஷ்டப்படுவதில்லை.
இதற்கிடையில் சைக்கிள் தயாரிக்கும் ஃபிரேம்களின் தரமும் மாறிவிட்டது. இன்று கார்பன் ஃபைபரை கொண்டு சைக்கிள் தயாரிக்கப்படுகிறது. இதனால் நடுவில் சைக்கிளில் கம்பி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்று முற்றிலும் வேறுபட்ட பல மாடல்களில் சைக்கிள்கள் வந்துவிட்டனர். நடுவில் கம்பியில்லாத பல சைக்கிள்கள் ஆண்களுக்காகவும் மார்கெட்டிற்கு வந்துவிட்டது.
இன்று பெண்களுக்கான சைக்கிளை வெறும் நடுவில் உள்ள கம்பியை வைத்து மட்டும் வேறுபடுத்துவதில்லை. மாறாகச் சைக்கிளின் மாடல், நிறம், சீட் மற்றும் ஹேண்டில் பாரின் வடிவமைப்பு அதன் உயரம், அம்சங்களை வைத்துப் பிரிக்கப்படுகிறது. இதுதான் பெண்களுக்கான சைக்கிளில் மட்டும் குறுக்கே கம்பி இல்லதாதற்கான வரலாறு.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!