இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயமா இருக்கே... டிராக்டர் டயருக்கு உள்ளே ஏன் தண்ணீரை நிரப்பி ஓட்றாங்க தெரியுமா?
டிராக்டர் டயர்களுக்கு உள்ளே ஏன் தண்ணீரை நிரப்பி ஓட்டுகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் உற்ற நண்பன் என்றால், அது டிராக்டர்கள்தான். முன்பெல்லாம் நிலத்தை உழுவதற்கு மாடுகளைதான் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதற்கு மிக கடின உழைப்பு தேவை என்பதுடன், நேரமும் அதிகமாக செலவாகும். ஆனால் நிலத்தை உழும் பணிகளை டிராக்டர்கள் தற்போது எளிமையாக்கி விட்டன.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த டிராக்டர்கள் தொடர்பாக ஏராளமான விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் டிராக்டர்களின் டயர்களுக்கு உள்ளே ஏன் தண்ணீர் ஊற்றப்படுகிறது? என்ற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரிந்திருக்காது.

இன்னும் சொல்லப்போனால், டிராக்டர் டயர்களுக்குள் தண்ணீர் ஊற்றப்படும் விஷயத்தையே பலரும் இதுவரை கேள்விபட்டிருக்க மாட்டார்கள்.

இந்த செய்தியின் மூலமாகதான் இப்படி ஒரு விஷயம் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்கும். சரி, டிராக்டர் டயர்களுக்கு உள்ளே ஏன் தண்ணீர் நிரப்பப்படுகிறது? எந்த அளவிற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்? இதன் மூலமாக கிடைக்கும் பயன்கள் என்னென்ன? என்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தியில் விடை வழங்கியுள்ளோம்.

டயர்களின் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காகதான் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் டயர்கள் 'ஸ்லிப்' ஆவது தவிர்க்கப்படும். அத்துடன் தண்ணீர் நிரப்பப்படுவதால், டிராக்டர் டயர்களின் ஆயுட்காலம் உயரும் என்பதும் முக்கியமான நன்மை ஆகும். கரடுமுரடான நிலப்பரப்பில் பயன்படுத்தப்படுவதால், டிராக்டர் டயர்கள் விரைவாகவே சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் தண்ணீர் நிரப்பப்படுவதன் மூலம், டிராக்டர் டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும். ஆனால் டிராக்டர் டயர்களில் நீங்கள் தண்ணீரை நிரப்புவதாக இருந்தால், முக்கியமான விஷயம் ஒன்றை பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். டயர்களில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் டிராக்டருக்கு ஸ்திரத்தன்மை வழங்கப்படுகிறது. டிராக்டருக்கு ஸ்திரத்தன்மை வழங்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதில், டயர்களில் தண்ணீர் நிரப்புவதுதான் மிகவும் எளிமையான வழிமுறை. இதற்கான செலவும் கூட மிகவும் குறைவு.

மேலும் இயந்திர ரீதியில் எந்தவிதமான அபாயங்களும் இல்லாமல் டிராக்டருக்கு ஸ்திரத்தன்மையை வழங்க முடியும். டயர்களில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் டிராக்டரின் எடை உயரும் என்பதுடன், டயர்களின் 'க்ரிப்' மேம்படும். டயர்கள் 'ஸ்லிப்' ஆவது தவிர்கப்படுவதால், மண் சேதமடைவது குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக திறனுடன் வேலை செய்ய முடியும் (வேலை நேரம் குறையும்). அதே நேரம் டிராக்டர் டயர்களில் தண்ணீருக்கு பதில் கால்சியம் குளோரைடு சொல்யூசனை பயன்படுத்தும் நடைமுறையும் சில நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது குளிர் மிகுந்த நாடுகளில், டயர்களுக்குள் தண்ணீரை அவ்வளவு எளிதாக நிரப்ப முடியாது. இதையும் குறிப்பிட வேண்டும்.

வெப்ப நிலை மிக குறைவாக இருக்கும் என்பதால், டயர்களுக்கு உள்ளே தண்ணீர் உறைந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே குளிர் மிகுந்த நாடுகளில் தண்ணீருக்கு பதிலாக கால்சியம் குளோரைடு சொல்யூசனை பயன்படுத்தி வருகின்றனர். கால்சியம் குளோரைடு சொல்யூசனை பயன்படுத்துவதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

குறைவான வெப்ப நிலை காரணமாக டயர்களுக்கு உள்ளே இது உறைந்து போகாது என்பதுதான் மிகவும் முக்கியமான நன்மை. அத்துடன் தண்ணீரை காட்டிலும் இதன் எடை 30 சதவீதம் அதிகம். அத்துடன் டயர் அல்லது ட்யூப்பிற்கு இந்த சொல்யூசன் எந்தவிதமான தீங்கையும் இழைக்காது என்பதும் முக்கியமான நன்மையாகும்.

இதன்படி ட்யூப்பின் உள்ளே 75 சதவீத இடத்தில் மட்டும்தான் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். எஞ்சிய இடத்தில் காற்று நிரப்பப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications