ஃபுல் அடித்தும் போதையில்லை... விமானத்தில் சரக்கு தராததால் ஊழியர்களை பீப் வார்த்தைகளால் திட்டிய பெண்
ஏர் இந்தியா விமானத்தில் கூடுதல் சரக்கு தராததால், ஊழியர்களை எல்லாம் பீப் வார்த்தைகளால் திட்டிய பெண்ணின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏர் இந்தியா விமானத்தில் கூடுதல் சரக்கு தராததால், ஊழியர்களை எல்லாம் பீப் வார்த்தைகளால் திட்டிய பெண்ணின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் இருந்து இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 10ம் தேதி பயணித்து கொண்டிருந்தது. இதில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், பிஸ்னஸ் க்ளாஸில் பயணம் செய்தார்.

பொதுவாக சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மது பரிமாறப்படுவது வழக்கம். இதன்படி பிஸ்னஸ் க்ளாஸில் பயணம் செய்த அயர்லாந்து நாட்டு பெண்ணுக்கும் மது பரிமாறப்பட்டது. ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அந்த பெண் போதையானார்.

ஆனால் அப்படி இருந்தும் கூட இன்னும் அதிகமாக மது வேண்டும் என விமானத்தின் கேபின் ஊழியர்களை அவர் நச்சரித்து கொண்டே இருந்தார். இது தொடர்பாக விமானத்தின் கமாண்டரிடம், கேபின் ஊழியர்கள் புகார் செய்தனர்.

எனவே அந்த பெண்ணுக்கு இனிமேல் மது பரிமாற வேண்டாம் என கேபின் ஊழியர்களிடம், விமானத்தின் கமாண்டர் தெரிவித்து விட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு கூடுதலாக மது வழங்க கேபின் ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

இது அந்த பெண்ணுக்கு தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. இதன்பின் தனது இருக்கையில் இருந்து திடீரென எழுந்த அவர், விமானத்திலேயே ரவுடித்தனம் செய்ய தொடங்கினார்.

கேபின் ஊழியர்கள் மற்றும் பைலட்களில் ஒருவரை நோக்கி அவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்தார். ''நான் ஒரு சர்வதேச கிரிமினல் வழக்கறிஞர். நான் உங்களுக்காகதான் வேலை செய்து வருகிறேன். நான் பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்துள்ளேன்.

ஆனால் எனக்கு ஒரு கோப்பை ஒயின் தர மறுக்கிறீர்கள். பிஸ்னஸ் க்ளாஸ் பயணிகளிடம் இப்படிதான் நடந்து கொள்வீர்களா? நீங்கள் பணம் பறிப்பவர்கள்'' என கத்தி கொண்டே இருந்த அந்த பெண் இடையிடையே தகாத வார்த்தைகளை சரமாரியாக பிரயோகித்தார்.

அத்துடன் இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தைகளையும் அந்த பெண் உபயோகித்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் ரவுடித்தனம் செய்த அந்த பெண்ணின் நடவடிக்கைகளை எல்லாம் அங்கிருந்தவர் வீடியோவாக எடுத்தனர்.

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோக்களை நீங்கள் கீழே காணலாம்.
விமானம் லண்டன் சென்றடைந்ததும், இது தொடர்பாக விமானத்தின் ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், ரவுடித்தனம் செய்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் இதுவரை எவ்விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications