பிரம்பில் பின்னிய கார்... பிக்கப்பிலும் பின்னுதாம்...!!
ஆக்கமும், ஊக்கமும் இருந்தாலும் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இந்த காரும் ஓர் உதாரணம். நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் உலகின் கையால் பின்னப்பட்ட முதல் காரை தயாரித்து அசத்தியிருக்கிறார்.
நாற்காலிகள் செய்வதற்கு பயன்படும் பிரம்பு குச்சிகளை இழை போன்று சீவி கையால் நெய்து இந்த காரை உருவாக்கியுள்ளார். இதுவே உலகின் முதல் கையால் நெய்து தயாரிக்கப்பட்ட காராக கருதப்படுகிறது.

பிரம்பு மரம்
ஆப்ரிக்காவில் வளரும் ரஃபியா என்ற பனை வகையை சேர்ந்த மரத்திலிருந்து கிடைக்கும் பிரம்பை வைத்து இந்த காரை உருவாக்கப்பட்டுள்ளது.

கூடை, நாற்காலிகள்
இந்த பிரம்பை பொதுவாக கூடை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பிற்கு நைஜீரியர்கள் பயன்படுத்துகின்றனர்.

கை நயம்
அர்டிசன் ஓஜோ ஒபனி என்ற 40 வயதுடைய நைஜீரியர்தான் தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள தனது ஒர்க்ஷாப்பில் இந்த காரை தயாரித்துள்ளார்.

நல்லாவே ஓடும்
எஞ்சின், டயர்கள் என அனைத்தும் சாதாரண கார்களை போன்றே பொருத்தப்பட்டிருப்பதால் இந்த கார் நன்றாகவே ஓடுகிறது

ஆச்சரியம்
இந்த காரை அந்தப் பகுதியை சேர்ந்தவர்களே ஆச்சரியத்துடன் பார்த்து பரவசமடைகின்றனராம்.

பிரம்பு கார்



Click it and Unblock the Notifications








