Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆஸ்திரேலியாவில் அரங்கேறிய தரமான சம்பவம்... வெற்றிகரமாக டேக்-ஆஃப் ஆனது உலகின் முதல் பறக்கும் மின்சார கார்...
ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
உலகின் முதல் பறக்கும் மின்சார கார் டேக்-ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மிக விரைவில் இப்-பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வரும்நிலையில் இந்த சோதனையோட்டம் ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டிருக்கின்றது.
நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டிற்குள் ஆலாடா ஏர்ஸ்பீடர் எம்கே3 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பறக்கும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நான்கு மீட்டர் நீளமுள்ள மல்டி-காப்டர் ரக மின்சார பறக்கும் காராகும்.
ஆஸ்திரேலியா விமானத்துறையின் ஒப்புதலுடன் தெற்கு ஆஸ்திரேலியாவின் பாலை வன பகுதியில் வைத்து இந்த பறக்கும் மின்சார கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்போது வெற்றிகரமாக பறக்கும் கார் டேக்-ஆஃப் ஆகி மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. இந்த சோதனையோட்ட வெற்றியை அடுத்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.
130 கிலோ எடையில் மின்சார பறக்கும் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதிக வேகம், கூடுதல் ரேஞ்ஜை வழங்கும் பொருட்டில் இலகு ரக பறக்கும் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வேகத்தில் பறக்கும் வேண்டும் என்பதற்காக மின்சார பறக்கும் வாகனத்தை எஃப்1 ஸ்போர்ட்ஸ் ரக கார் உருவத்தில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.
இது மணிக்கு 150 கிமீ முதல் 250 கிமீ வரையிலான வேகத்தில் பறக்கும். விமானத்தின் காக்பிட் பகுதியுடன் பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு பணிகளில் இவ்வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் டெலிரோபோக்கள் வாயிலாக பறக்கும் கார் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், பயன்பாட்டிற்கு வரும்போது மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கும்.
இந்த பறக்கும் மின்சார கார் குறித்து நிறுவனம் கூறியாதவது, "நாங்கள் காக்பிட்டில் ஒரு ரோபோவை நிலை நிறுத்தியுள்ளோம். அது தரையில் ஒரு பைலட்டுடன் இணைக்கப்பட்டது. பைலட் தலையைத் திருப்பும்போது, ரோபோவும் தலையைத் திருப்பும். இவ்வாறு பைலட்டின் அனைத்து செயல்களையும் காப்பி செய்து அது செயல்படும் திறனில் அது உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறே பறக்கும் கார் ஆஸ்திரேலியாவில் சோதனையோட்டத்தை மேற்கொண்டிருக்கின்றது. 15 நிமிடம் ஆயுள்கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் பறக்கும் கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பயன்பாட்டிற்கு வரும்போது இது ஓலா, உபேர் போன்ற ரைடு-ஷேரிங் நிறுவனங்களின்கீழ் வரும் என நிறுவனம் கூறியிருக்கின்றது.
ஆகையால், மிக விரைவில் இவ்வுலகில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த பறக்கும் காரின் சோதனையோட்டம் அமைந்துள்ளது.