Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஹாங்காங்கில் கட்டப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம்!
உலகின் மிக நீளமான கடல்பாலம் சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அது பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆசிய பிராந்தியத்திலேயே மிகச்சிறப்பான போக்குவரத்து கட்டமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்துவதில் சீனா மும்முரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், உலகின் மிக நீளமான கடல் பாலம் ஒன்றை சீனா கட்டி உள்ளது. விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட இருக்கும், இந்த பிரம்மாண்ட பாலத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சீனாவிலுள்ள ஹாங்காங், மெகாவ், சுகாய் ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் விதத்தில், கடலின் நடுவில் இந்த பாலம் 50 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. 2009ம் ஆண்டு இந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
இந்த பிரம்மாண்ட பாலத்தை அமைப்பதற்காக கடல் நடுவில் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்புக்கு மண் மற்றும் பாறைகளை நிரப்பி, இரண்டு செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மணல் திட்டில் இரும்பு மற்றும் ராட்சத கான்க்ரீட் தூண்கள் ஊன்றப்பட்டு அதன் மீது இந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த 50 கிமீ தூரத்திற்கான கடல் வழி பாலத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. செயற்கையாக உருவாக்கப்பட்ட இரண்டு தீவுகளுக்கு இடையில் 4 கிமீ தூரத்திற்கு சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்லும்.
இந்த இடத்தில் மேல்புறத்தில் கப்பல் போக்குவரத்து தங்கு தடையில்லாமல் நடைபெற ஏதுவாக இவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் கடும் புயல், ராட்சத அலை போன்றவற்றில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாத தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. அ்த்துடன், வாகனப் போக்குவரத்தும் இடையூறு இல்லாமல் நடப்பதற்கு பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு இருக்கிறது.
ஹாங்காங், மக்காவ், சுகாய் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையில் 4 மணிநேரமாக இருந்த கார் பயணம் இந்த பாலம் மூலமாக வெறும் 45 நிமிடங்களாக குறையும். இதனால், இந்த பகுதியில் மிகச் சிறப்பான போக்குவரத்து இணைப்பு பெறும்.
இந்த புதிய பாலம் மூலமாக சுற்றுலாத் துறையும், துறைமுகங்களுக்கான எளிதான இணைப்பு கிடைக்கவும் வழி வகை ஏற்படும். இந்த பாலம் உலகின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய பாலம் ரூ.6,700 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான முதலீடு மிக அதிகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த பாலம் திறக்கப்பட்டு, அடுத்த 20 ஆண்டுகளில் 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Picture credit: HZMB
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!