வான்வழிப்போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல்..!
வான்வழிப்போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் மீண்டும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
உலகின் ஆகப் பெரிய விமானமாகக் கருதப்படும் ஏர்லேண்டர் (Airlander) 10 எனும் ஆகாயக் கப்பல் அதன் இரண்டாவது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

92 மீட்டர் நீளமும், 43.5 மீட்டர் அகலமும், 26 மீட்டர் உயரமும் கொண்ட ஏர்லேண்டர் 10 உலகில் உள்ள விமானங்களைக்காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமானதாகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஹைபிரிட் ஏர் வெஹிகிள்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்த இந்த ஏர்லேண்டர் 10 ஒரு ஹைபிரிட் ஆகாயக் கப்பல் ஆகும்.

பிலிம்ப், ஹெலிகாப்டர் (Blimp, helicopter), விமானம் ஆகியவற்றின் தன்மைகளைக் கொண்ட ஆகாயக் கப்பல், பல நாட்களுக்குப் பறக்கும் தன்மை கொண்டது.

அமெரிக்க ராணுவத்தின் தேவைக்காக முதலில் இந்த ஆகாயக் கப்பல் கட்டமைக்கப்பட்டது. பிறகு இந்த முடிவை அமெரிக்க ராணுவம் கைவிட்டதால் பயணிகள் பயண்பாட்டிற்காக இது மாறியமைக்கப்பட்டது.

பயணிகள் பயண்பாட்டிற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட ஏர்லேண்டர் 10 விமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெள்ளோட்டத்த்ஜிற்கு தயாரானது.

இந்த ஆகாயக் கப்பலால் தண்ணீர், பனி மற்றும் பாலைவனத்தில் என பலத்தரப்பட்ட நிலப்பரப்பிலும் கூட தரையிறங்கவும் டேக் ஆஃப் செய்யவும் வல்லமை பொருந்தியுள்ளது.

இந்த ஏர்லேண்டர் 10 ஒரு ஹைபிரிட் ஆகாயக் கப்பல் என்பதால் ஏரோஸ்டேடிக் மற்றும் ஏரோடைனமிக் முறையில் இதனால் பறக்க முடியும்.

சராசரியான விமானத்தைக் காட்டிலும் குறைவான எரிவாயுவையே ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் பயன்படுத்துகிறது.

அத்துடன் கூடுதலான எடையைச் சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகாயக் கப்பல். 4,900 மீட்டர் உயரம் வரையில் பறக்கும் தன்மையைக் கொண்டது

மணிக்கு 148 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லவும் 2 வாரம் வரை வானத்தில் பறக்கவும் அதனால் முடியும் என்பது வியப்பின் உச்சம்.

இந்த ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பலில் நான்கு 4.0 லிட்டர் சூப்பர்சார்ஜுடு வி8 டீசல் இஞ்சின்கள் உள்ளது.

இந்த ஒவ்வொரு இஞ்சினும் அதிகபட்சமாக 350 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டதாகும்.

லண்டனின் Cardington விமானத் தளத்தில் இருந்து ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல், கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

இரண்டாவது முறையாக அதே ஆகஸ்ட் மாதத்தின் 24ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் போது எதிர்பாராதவிதமான இந்த ஆகாயக் கப்பல் விபத்தில் சிக்கியது.

வெற்றிகரமாக கிளம்பிச் சென்ற இந்த விமானம் லண்டனின் Cardington விமானத் தளத்தில் தரையிரக்கப்படும் போது தரையில் மோதியதில் விமானத்தின் காக்பிட் பலத்த சேதமடைந்தது.

வெற்றிகரமாக கிளம்பிச் சென்ற இந்த விமானம் லண்டனின் Cardington விமானத் தளத்தில் தரையிரக்கப்படும் போது தரையில் மோதியதில் விமானத்தின் காக்பிட் பலத்த சேதமடைந்தது.

தரையிரங்கும் போது தரையில் மோதல் ஏற்படாமல் தடுக்க ஒரு அமைப்பு இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தற்போது வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

லண்டனின் Cardington விமானத் தளத்தில் இருந்து தனது பயணத்தை துவங்கிய இந்த உலகின் மிகப்பெரிய விமானம் 3 மணிநேரம் தொடர்ந்து பறந்துவிட்டு, மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

மீண்டும் பலகட்ட சோதனைக்குப் பின்னர் இந்த ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கூடுதல் பாடுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட பின்னர் வான்வழி போக்குவரத்தில் இந்த ஆகாயக் கப்பல் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உலகிலேயே பெரிய பயணிகள் விமானம் என்ற சிறப்பை பெற்ற ஏர்பஸ் ஏ380 விமானத்தால் அதிகபட்சமாக 853 பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும்.

ஆனால், ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் பயணிகள் போக்குவரத்திற்கு உகந்ததாக உருமாறும் போது பல மடங்கு பயணிகளை இதனால் ஏற்றிச்செல்ல முடியும்.

மேலும், இடைவிடாது பயணிக்கும் தன்மை கொண்டிருப்பதால் ஆகாய மார்க்கமாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் நிகழலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஆகாயமார்க்கமாக 10 டன் வரை எடையை சுமந்து செல்லும் வல்லமை பெற்ற ஏர்லேண்டர் 10 ஆகாயக் கப்பல் தரையில் வெறும் ஒரு டன் மட்டுமே எடை கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட ஏர்லேண்டர்10 - ஆகாயக்கப்பலின் சோதனை ஓட்டம் வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணவும்.


Click it and Unblock the Notifications








