உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்..!!
உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்..!!
உலகின் அதி நீளமான கடல் பாலத்தின் மீது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங் சூஹூஹாய் மற்றும் மாக்காவு ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக சீனா 55 கி.மீ நீளத்தில் கடல் பாலம் ஒன்றை கட்டி வந்தது.

இந்திய மதிப்பில் ரூ.1060 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

சீனாவில் அதிகரித்து வரும் புகை மாசுவால், அந்நாடு வாகனங்களுக்கு மின்சாரத்தை எரிசக்தியாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பல பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன், மின்சார வாகன தயாரிப்பிற்கான ஒப்பந்ததை சீனா மேற்கொண்டுள்ளது.

தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஹாங்காங்- சூஹூஹாய்-மாக்காவு கடல் பாலத்தில் மின்சார வாகன பேட்டரிகளுக்கான 550 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி செலவில் சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனாவின் மின்சார துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், மின்சார கார்கள், டாக்ஸிக்கள், தொலைதூரம் பயணிக்கும் கோச்சுகள் என அனைத்து ரக வாகனங்களுக்கான பேட்டரிகள், ஹாங்காங் கடல் பாலத்தின் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

550 சார்ஜிங் நிலையங்களில், மாற்று விசை மின்னோட்டம் (AC) முறையில் இயங்கும் 121 நிலையங்கள் மற்றும் நேர்திசை மின்னோட்டம் (DC) முறையில் இயங்கும் 429 நிலையங்கள் இந்த கடல் பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில எழுத்தான Y வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது கட்டமைப்பு நிலையில் இருக்கும் போதே பல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனுடைய கட்டுமானமும் பெரியளவில் பேசப்பட்டு வந்தது.

ஹாங்காங்கில் இருந்து சீனாவின் சூஹூஹாய் நகரத்திற்கு செல்ல இதுவரை 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால் இந்த கடல் பாலத்தின் வழியே சென்றால் ஹாங்காங்கில் இருந்து சூஹூஹாய் நகரத்தை வெறும் 30 நிமிடங்களில் அடையலாம்.

இந்நிலையில் உலகளவில் நிலவி வரும் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஹாங்காங்- சூஹூஹாய்-மாக்காவு கடல் பாலம் இந்தாண்டின் இறுதியில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








