Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்..!!
உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்..!!
உலகின் அதி நீளமான கடல் பாலத்தின் மீது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங் சூஹூஹாய் மற்றும் மாக்காவு ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக சீனா 55 கி.மீ நீளத்தில் கடல் பாலம் ஒன்றை கட்டி வந்தது.
இந்திய மதிப்பில் ரூ.1060 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
சீனாவில் அதிகரித்து வரும் புகை மாசுவால், அந்நாடு வாகனங்களுக்கு மின்சாரத்தை எரிசக்தியாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக பல பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன், மின்சார வாகன தயாரிப்பிற்கான ஒப்பந்ததை சீனா மேற்கொண்டுள்ளது.
தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஹாங்காங்- சூஹூஹாய்-மாக்காவு கடல் பாலத்தில் மின்சார வாகன பேட்டரிகளுக்கான 550 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி செலவில் சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனாவின் மின்சார துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், மின்சார கார்கள், டாக்ஸிக்கள், தொலைதூரம் பயணிக்கும் கோச்சுகள் என அனைத்து ரக வாகனங்களுக்கான பேட்டரிகள், ஹாங்காங் கடல் பாலத்தின் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
550 சார்ஜிங் நிலையங்களில், மாற்று விசை மின்னோட்டம் (AC) முறையில் இயங்கும் 121 நிலையங்கள் மற்றும் நேர்திசை மின்னோட்டம் (DC) முறையில் இயங்கும் 429 நிலையங்கள் இந்த கடல் பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.
ஆங்கில எழுத்தான Y வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது கட்டமைப்பு நிலையில் இருக்கும் போதே பல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனுடைய கட்டுமானமும் பெரியளவில் பேசப்பட்டு வந்தது.
ஹாங்காங்கில் இருந்து சீனாவின் சூஹூஹாய் நகரத்திற்கு செல்ல இதுவரை 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த கடல் பாலத்தின் வழியே சென்றால் ஹாங்காங்கில் இருந்து சூஹூஹாய் நகரத்தை வெறும் 30 நிமிடங்களில் அடையலாம்.
இந்நிலையில் உலகளவில் நிலவி வரும் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஹாங்காங்- சூஹூஹாய்-மாக்காவு கடல் பாலம் இந்தாண்டின் இறுதியில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.