பிரபல விமான உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த யமஹா! இப்படி ஒரு பணியை இது செய்து வருகிறதா! நம்பவே முடியல!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா விமான உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. இந்த இணைவு எதற்காக என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா மிக விரைவில் இலகு ரக விமானத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே விமானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் யமஹா கூட்டணியைத் தொடங்கியுள்ளது. ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஷின்மேவா எனும் விமான நிறுவனத்துடனே யமஹா தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இரு நிறுவனங்களின் இணைவு ஜூன் 29ம் தேதி அன்றே அரங்கேறிவிட்டதாக யமஹா அறிவித்திருக்கின்றது. இருசக்கர வாகன உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் யமஹா, விமான தயாரிப்பில் கால் தடம் பதித்திருப்பதாக வாகன உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், இந்நிறுவனம் விமானத்துறையில் கால் தடம் பதிப்பு இது முதல் முறையல்ல.

ஆம், ஏற்கனவே நிறுவனம் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களுக்கான எஞ்ஜினை உற்பத்தி செய்யும் பணியில் யமஹா ஈடுபட்டு வருகின்றது. தற்போது, செய்யப்பட்டிருக்கும் கூட்டணியிலும்கூட யமஹா நிறுவனம் எஞ்ஜின் தயாரிப்பு பணிகளையே மேற்கொள்ள இருக்கின்றது. ஆம், இலக எடைக் கொண்ட விமானங்களுக்கு ஏற்ற சிறிய ரக பாரல்லல்-ட்வின் எஞ்ஜினைய யமஹா உருவாக்க இருக்கிறது.

விமானத்தை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குவதல் பணிகளை ஷின்மேவா நிறுவனம் மேற்கொள்ளும். முன்னதாக இந்நிறுவனம் பறக்கும் கப்பல்களை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது யமஹாவுடன் கூட்டணி வைத்து ஷின்மேவா நிறுவனம் சிறிய ரக வர்த்தக விமானங்களை தயாரிக்கும் பணியிலும் களமிறங்கியிருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல யமஹா நிறுவனம் விமானத்துறைக்கு புதியவர் அல்ல. நிறுவனம் 90களிலேயே விமான உற்பத்தியில் ஈடுபட தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. விவசாய பணிகளுக்கு உதவக் கூடிய ஆர்-மேக்ஸ் ஹெலிகாப்டரை அறிமுகம் செய்ததன் அடிப்படையில் விமானத்துறையில் நிறுவனம் கால் தடம் பதித்தது.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மோஹாவ்க் விமான நிறுவனம், 2000மாவது ஆண்டில் இருந்து தனது கெய்ரோகாப்டர்களுக்கு யமஹாவின் ஸ்நோமொபைல் எஞ்ஜின்களை பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே ஷின்மேவா நிறுவனத்தின் விமானங்களுக்கும் எஞ்ஜின்களை தயாரித்து கொடுக்கும் பணியில் யமஹா களமிறங்கியிருக்கின்றது.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஜப்பானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1952ம் ஆண்டில் இருந்து விமான உற்பத்தியில் ஷின்மேவா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில், நான்கு எஞ்சின் புரோபல்லர் விமானமான பிஎஸ் -1 என்ற விமானத்தை உற்பத்தி செய்ய மிகப்பெரிய ஆர்டர் அரசாங்கத்திடம் இருந்து கிடைத்தது.

ஷின்மெய்வா 2003 ஆம் ஆண்டில் யுஎஸ்-2 என்ற விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே யமஹா உடன் கூட்டணி வைத்து இலகு ரக விமானத்தை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Courtesy: ShinMaywa
இந்த புதிய விமானத்திற்கான எஞ்ஜினையே யமஹா விரைவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த எஞ்ஜின் என்ன மாதிரியான திறன் வசதிகளுடன் உருவாக்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








