ரத யாத்திரை வாகனம் சட்ட விதிமீறலா?
தமிழக அரசியலில் பெரும் பூகம்பம் கிளம்ப்பியிருக்கும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வாகனம் போக்குவரத்து சட்ட வீதிமீறலுக்கு உள்ளானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசியலில் பெரும் பூகம்பம் கிளம்ப்பியிருக்கும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வாகனம் போக்குவரத்து சட்ட வீதிமீறலுக்கு உள்ளானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸமிஷன் என்ற அமைப்பு கடந்த பிப். மாதம் உ.பி. மாநிலம் அயோத்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை ஒன்றை துவங்கியது. சுமார் 6 மாநிலங்கள் கடந்து ரத யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்திற்குள் நுழைந்தது.

ரத யாத்திரை நுழைவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு, 144 தடை உத்தரவு, சட்டசபை களேபரங்கள் என தமிழக அரசியலே பரபரப்பிற்குள்ளானது.

இந்நிலையில் தமிழகத்திற்குள் நுழைந்த ரத யாத்திரை ரதம போக்குவரத்து சட்டத்திற்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அடுத்த விவாத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் : "ரத யாத்திரைக்காக வரும் வாகனத்தில் முன்புறம், பின்புறமும் நம்பர் பிளேட் இல்லை, பொதுவாக நமபர் பிளேட் இல்லாத வாகனத்தை பதிவு செய்யப்படாத வாகனம் என்றே கணக்கில் கொள்ளப்படும். அதனால் ரத யாத்திரை வரும் வாகனம் பதிவு செய்யாத வாகனமாவே கருதப்படுகிறது.

ரத யாத்திரை வரும் வாகனம் முற்றிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அளவை வைத்து பார்க்கும் போது அது ஏதேனும் சரக்கு வாகனமாகவே தெரிகிறது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது தவறு, இதில் சில சாதுக்கள், உட்பட சிலர் வருகின்றனர். இதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே வடிவமைப்பை மாற்றியமைப்பதற்காக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற வாகனங்களை மாற்ற அனுமதியில்லை.

எனினும் இந்த வாகனத்திற்கு சிறப்பு அனுமதி வாங்கியிருந்தாலும் வாகனம் வடிவமைப்பை மாற்றிய பின்பு அதற்கான சான்றிதழும், இன்சூரன்சும் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது. " என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications