ரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா?
ஆன்-லைன் பண பரிமாற்றம் செய்ய பயன்படும் செல்போன் செயலிகளில் ஒன்றான போன் பே ரூ. 200 கேஷ்பேக் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொது முடக்கம் நீடித்து வந்தநிலையில், தற்போது அதில் லேசான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதேசமயம், வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகளில் முழு முடக்கம் தற்போதும் நீடித்த வண்ணம் இருக்கின்றது.

தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் பெரும்பாலான குறிப்பிட்ட சில பகுதிகள் மெல்ல பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப ஆரம்பித்திருக்கின்றன.
ஆனாலும், வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கு அரசின் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதும் ஓர் காரணமாக உள்ளது.

இந்த நிலையில், தனியார் வாடகை வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக சில வாடகை நிறுவனங்கள் சிறப்பு சலுகைத் திட்டத்தை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான கால் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலாவிற்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஓலா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

போன் பே எனும் மொபைல் செயலி நிறுவனமே இதனை அறிவித்துள்ளது. இது, ஓர் ஆன்லைன் ரீசார்ஜ் மற்றும் பண பரிமாற்றம் செய்யும் செயலி ஆகும். டிஜிட்டல் பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கவும், மக்களை கால் டாக்சி சேவையின் பக்கம் ஈர்க்கும் விதமாகவும் சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது.

அதாவது, இந்த சிறப்பு சலுகை திட்டத்தின்மூலம் அதன் வாடிக்கையாளருக்கு ரூ. 200 கேஷ்பேக் வழங்க இருக்கின்றது போன் பே. முதல் இரு சவாரிகளுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் பொருந்தும்.
அண்மையில் ஓலா மற்றும் போன் பே ஆகிய இரு நிறுவனமும் இணைவிற்கான ஒப்பந்தத்தைப் போட்டன. இதனடிப்படையிலேயே ஓலாவிற்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா கால் டாக்சி ஆப்-ஐப் போலவே போன் பே ஆப்-ஐ ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய செல்போன்களில் பயன்படுத்த முடியும்.
தற்போது ஓலா கால் டாக்சி ஆப்பை இந்தியாவில் பல மில்லியன் நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் விதமாகவே போன் பே இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓலா கால் டாக்சி பக்கம் ஈர்க்கப்படுவர் என நம்பப்படுகின்றது. இத்துடன், போன் பே பயனரையும் இந்த அறிவிப்பு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆப்பின் மூலம் பிறரின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், யுபி ஐடி மூலம் பிறரிடத்தில் இருந்து நேரடியாக பணத்தை பெறும் வசதியும் இடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
கொரோனா பரவல் ஆரம்பித்தற்கு பின்னர் மக்கள் நேரடியாக பிறரிடத்தில் இருந்து பணத்தைப் பெறுதல் போன்றவற்றைத் தவிர்த்து வருகின்றனர். இதே யுக்தியைதான் சில நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.

எனவே, பலர் சமூக இடைவெளியை உறுதி செய்யும் விதமாக ஆன்-லைன் பேமெண்ட் மற்றும் தொடர்பில்லா நுகர்வு உள்ளிட்டவற்றிற்கு மாறி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே ஓலா நிறுவனம் போன் பே நிறுவனத்துடன் கூட்டு வைத்தது. மேலும், இதனை ஊக்குவிக்கும் விதமாக முதல் இரு சவாரிகளுக்கு மட்டும் ரூ. 200 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை கால் டாக்சி நிறுவனங்கள் எதிர்பாராத அடியைப் பெற்று வருகின்றன. இதனால், கால் டாக்சி துறை மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. மக்களின் இடம்பெயர்தலுக்கு அரசு தடை விதித்ததே கால் டாக்சிதுறையின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது.

இதனால் மக்களுடன் சேர்ந்து வாகனங்களும் சாலையோரங்களில் முடங்கின. இந்த நிலையில்தான் பொது முடக்கத்தில் லேசான தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களை கால் டாக்சி பக்கம் ஈர்க்க போன் பேவின் சலுகை திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா மற்றும் போன் பே கூட்டணி குறித்து ஓலாவின் செய்தித் தொடர்பாளரான ஆனந்த் சுப்பிரமணியன் கூறியதாதவு, "தொற்றுநோய் பேரிடர் காலத்தில் டிஜிட்டல் கட்டணமுறை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கட்டண பலுவை குறைக்கும் விதமாக மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அறிவித்து வருகின்றது. இதனடிப்படையிலேயே நாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் போன் பே உடன் இணைவு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications








