Just In
- 2 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 3 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 5 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 10 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னதான் இருந்தாலும் இப்படி நக்கலடிக்க கூடாதுங்க! பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்! வைரல் வீடியோ!
இளைஞர் ஒருவர் கிரிக்கெட் வீரர் உடையணிந்து பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய வீடியோச இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இளைஞர் ஒருவர் கிரிக்கெட் வீரர்களின் உடை அணிந்து பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகின்றது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் லிட்டர் ஒன்று ரூ. 50க்கும் குறைவாக கிடைத்து வருகின்றநிலையில், இந்தியாவில் ரூ. 100ஐ தாண்டி விற்கப்பட்டு வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர் விலை உயர்வை பெட்ரோல், டீசல் பெற்று வருவதனால் பலர் கார்களில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கும், இருசக்கர வாகனத்தில் இருந்து சைக்கிள் பயன்பாட்டிற்கும் மாறியிருக்கின்றனர். ஒருபக்கம் கொரோனா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்தி வருவதால் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதேசமயம், எரிபொருள் செலவு கையை மீறிவிடக் கூடாது என்பதிலும் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனடிப்படையிலேயே இருசக்கர வாகன பயன்பாடு மற்றும் சைக்கிள் பயன்பாடுகளுக்கு அவர்கள் மாறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலை சென்சுரியை (ரூ.100)த் தொட்டதைக் கண்டித்து இளைஞர் ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்று கிரிக்கெட் விளையாடுவதைப் போன்று போஸ் கொடுத்திருக்கின்றார். ஸ்கூட்டர் ஒன்றில் வரும் அவர் திடீரென பெட்ரோல் பம்பிற்கு முன்னர் சென்று வெற்றி கனியைப் பறித்ததுபோன்று மட்டையையும், கைகளையும் தூக்கி உற்சாகமடைந்தார்.
தொடர்ந்து, பெட்ரோல் பங்கில் நின்றவாறு பந்தை அடிப்பதுபோன்ற செய்கையும் செய்தார். இதுகுறித்த வீடியோவையே பின்னணி இசையுடன் அவர் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார். குறிப்பாக, கிரிக்கெட் போட்டியின்போது வீரர் சதம் அடிக்கும்போது கொடுக்கக் கூடிய கமென்ட்ரியை அவர் பின்னணியில் சேர்த்திருக்கின்றனர். இத்துடன், திரைப்படங்களின் பின்னணி இசைகள் சிலவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் மிக வைரலாக வருகின்றது. பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கான வரியை ஒன்றிய அரசு பல மடங்கு அதிகமாக விதித்திருப்பதே இந்தியாவில் அதிக விலையில் அவை விற்பனையாவதற்கான காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மே 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோலின் அடிப்படை விலையே ரூ. 34.19 மட்டுமே. ஆனால், பல தரப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 92.58க்கு அன்றைய தினம் விற்பனைச் செய்யப்பட்டு. கலால், வாட், சரக்கு மற்றும் டீலர் கமிஷன் என பல முனைகளில் கூடுதல் தொகை (வரி) சேர்க்கப்பட்டு அடிப்படை விலையைவிட பல மடங்கு அதிக விலையில் பெட்ரோல், டீசல் விற்பனைச் செய்யப்படுகின்றது.
இதில், மத்திய அரசு மட்டும் கலால் வரியாக ஒரு லிட்டருக்கு 35.35 சதவீதம் வரை வரியாக பெற்றுக் கொள்கின்றது. டீலர் கமிசன் சராசரியாக ரூ. 3.77 வரை ஒரு லிட்டருக்கு வசூலிக்கப்படுகின்றது. இதுதவிர மாநிலங்களும் தங்களின் பங்காக கணிசமான தொகையை வரியாக விதிக்கின்றன.
Shyam Rangeela
இதன் விளைவாக இன்று பெட்ரோல் ரூ. 100ஐக் கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 100ஐத் தொட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையையே விநோத முறையில் இளைஞர் நக்கலடித்துள்ளார்.