Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டாங்க... இதை நினைத்து சிரிக்கவா, அழுகவா..?
அதிகாரிகளை திணற வைக்கின்ற வகையில் இளைஞர் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரசின் எண்ணிக்கை முன்பெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும், குறிப்பாக தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வைரசின் தொற்று மிக தீவிரமாக காணப்படுகின்றது.
எனவே, மக்கள் பலர் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். ஏனென்றால் தொற்று அதிகரிப்புடன் அண்மைக் காலங்களாக இறப்புகளின் எண்ணிக்கையும் சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆகையால், ஒரு சில மாநிலங்கள் லாக்டவுணை மீண்டும் தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழக்திலும்கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட லேசான தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மாவட்டங்களில் லேசான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது.
கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துகின்ற அதேவேலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியிருப்பதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், அதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எத்தனை மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். பரிசோதனை குறைவாகச் செய்யப்படுவதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இதனை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில்தான், இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி, உடனடியாக அதற்கான பரிசோதனையைச் செய்ய வேண்டும் என அடம்பிடித்து வரும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவம் உத்தப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதிய மருத்துவ கருவி இல்லாததாலும், பலர் பரிசோதனைக்காக காத்திருப்பதன் காரணத்தினாலும் ஒரு சிலருக்கு அறிகுறி தென்பட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகார்கள் நாடு முழுவதும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையில்தான் தானாக முன் வந்து தனக்கு கொரோனா பரிசோதனைச் செய்ய வேண்டும் என இளைஞர் ஒருவர் அதிகாரிகளிடத்தில் அடம்பிடித்து வந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
இதற்காக, அரசு மருத்துவமனை மற்றும் அதிகாரிகள் என பலரிடத்தில் அவர் முறையிட்டுள்ளார். ஆனால், அவரின் கோரிக்கைக்கு எந்தவொரு அரசு துறையும் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகின்றது. மேலும், பரிசோதனைக்கு பதிலாக அந்த இளைஞரை அரசு ஊழியர்கள் விரட்டியத்துள்ளனர்.
இதனால், கடும் வேதனையுற்ற அந்த இளைஞர் அரசு அதிகாரி ஒருவரின் காரின் முன்பு வந்து விழுந்து, தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், உடனடியாக பரிசோதனையும்படியும் கூறியுள்ளார். இளைஞர் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அவரை சமாதானப்படுத்தி வீடு திருப்ப முயற்சி செய்தனர். ஆனால், அதில் விருப்பமில்லாத அந்த இளைஞர் தொடர்ச்சியாக தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டே ஆக வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இளைஞரின் பிடிவாத செயலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த செயலின் காரணமாக போலீஸார் ஏதேனும் நடவடிக்கையை இளைஞர் மீது எடுத்தார்களா என்பதுகுறித்தும் தெரியவில்லை. கொரோனா பரிசோதனை முடிவுக்காக அவர்கள் காத்திருக்கலாம் என கூறப்படுகின்றது. கொரோனா அறிகுறி தென்பட்டாலும் இத்தகைய விபரீத முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் அறிவுரையாக இருக்கின்றது.
காரின் முன்பு படுப்பது எல்லாம் அந்த நபருக்கு மட்டுமின்றி காரில் வருபவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். மேலும், தற்போது இளைஞர் செய்திருப்பது போக்குவரத்து விதிமீறலும்கூட. அதேசமயம், வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கு பல விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் தனித்துவமான உருவாக்கி கடைபிடித்து வருகின்றன. பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை காரணமாகவே இந்த இழுபறி நிலை நீடித்து வருகின்றது.
எனவே, அறிகுறிகள் மிக அதிகளவில் தென்படும் நபர்கள் மற்றும் தொற்று இருப்பவர்களுடன் தொடர்பு வைத்தவர்கள் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே முன்னுரிமைக் கொடுத்து பரிசோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன்காரணமாகவே, குறைந்த அறிகுறிகளுடன் இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!