ரூ.40,000 விலையில் புதிய 100சிசி பைக்: ஹோண்டா அறிவிப்பு

ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்துவிட்ட ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிவேமான விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.
தனது உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அந்த நிறுவனம், தற்போது மார்க்கெட்டில் முன்னிலை பெற தனது மாடல்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், கிராமப்புற மார்க்கெட்டை தன் வசப்படுத்தும் வகையில் புதிய 100சிசி பைக்கை அடுத்த நிதியாண்டில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் என்கே.ரத்தன் கூறுகையில்," வரும் ஜனவரியில் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 100சிசி பைக்கை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
அடுத்த நிதியாண்டில் இந்த புதிய பைக் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது இந்த பைக் ஜப்பானில் உள்ள எங்களது வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிவமைப்பு பணிகளில் இந்திய எஞ்சினியர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், கிராமப்புற சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில் புதிதாக 300 விற்பனை மையங்களை நடப்பு நிதி ஆண்டில் திறக்க இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








