அசாருதீன் மகனுக்கு சூப்பர் பைக்கால் வந்த வினை

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 சூப்பர் பைக்கில், அவர் அதிவேகமாக சென்றபோதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்புடன் சாலை வசதிகள் இல்லாததால், சூப்பர் பைக் விற்பதற்கான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
இககுறித்து பிரபல கார் மற்றும் பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியதாவது:
"சூப்பர் பைக்குகள் சர்வசாதாரணமாக மணிக்கு 300 கிமீ வேகம் செல்லும் திறன் படைத்தவை. இந்த பைக்குளை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி தேவை. முக்கியமாக,எவ்வளவு வேகமாக ஓட்டுகிறோம் என்பதைவிட, சரியாக எந்த நேரத்தில் பைக்கை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையான கலை சூப்பர் பைக் ஓட்டுபவர்களுக்கு வேண்டும்.
மேலும், இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு ஏற்ற சாலை வசதிகள் இல்லை. ஆனால், 1,200சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கை வெகு எளிதாக இங்கு வாங்கிவிட முடிகிறது. பல இளைஞர்கள் நண்பர்களின் தூண்டுதல்களால் சூப்பர் பைக்குகளை வாங்கி விடுகின்றனர்.
சூப்பர் பைக் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி பெறுவது மிக அவசியம். ஆனால், நம் நாட்டில் பலர் அதன் பேலன்ஸ் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஓட்டுவதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தடுக்க சூப்பர் பைக் விற்பதற்கும், லைசென்ஸ் வழங்குவதிலும் புதிய கெடுபிடிகளை கொண்டு வருவது அவசியம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








