தமிழகத்தில் புதிய 150சிசி பாக்ஸர்: பஜாஜ் அறிமுகப்படுத்தியது

நகர்ப்புறங்களில் மட்டும் கோலோய்ச்சி வரும் 150 சிசி ரக பைக்குகளை, கிராமப்புற சந்தையிலும் கொண்டு செல்லும் முயற்சியை பஜாஜ் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கிராமப்புற சந்தையில் நன்கு அறிமுகமான தனது பாக்ஸர் வரிசைகளின் பெயரில் புதிய 150சிசி பைக்கை பஜாஜ் வடிவமைத்துள்ளது.
இந்த பைக்கை சமீபத்தில் பஜாஜ் ஆர்ப்பாட்டமில்லாமல் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தனக்கு முக்கியமான சந்தை என்று தமிழகத்தை வர்ணித்து வரும் பஜாஜ், 150சிசி பாக்ஸர் பைக்கை நேற்று தமிழக மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.
சென்னையில் நடந்த விழாவில் பஜாஜ் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் சந்திரசேகர் புதிய பாக்ஸரை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
இரண்டு சக்கர எஸ்யூவி கார் என்று கூறும் அளவுக்கு வலிமையான பாகங்களுடன் வந்துள்ள புதிய பாக்ஸர் எஞ்சின் 12 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல்கொண்டது.
மலைப்பாங்கான சாலைகள், கரடு முரடான சாலைகள் என எந்த சாலைகளிலும் அனாயசமாக செல்லும் திறன் வாய்ந்த வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கம் அழகான ஸ்கூப், பின்பக்க கேரியர் என முழுக்க முழுக்க கிராமப்புற சந்தையில் எடுபடும் வடிவமைப்புடன் வந்துள்ளது புதிய பாக்ஸர்.
இந்த புதிய 150சிசி பாக்ஸர் பைக் சென்னையில் ரூ.43,247 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








