உள்நாட்டிலேயே ஹயோசங் ஜிடி250ஆர் பைக் தயாரிப்பு: டிஎஸ்கே தீவிரம்

Hyosung GT250R
ஹயோசங் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை உள்நாட்டிலேயே தயாரிக்கும் விதமாக புதிய ஆலையை கட்டுகிறது டிஎஸ்கே. இதன்மூலம், ஹயோசங் ஜிடி250ஆர்பைக்கின் விலை கணிசமாக குறையும்.

இந்த புதிய ஆலையை ரூ.300 கோடி முதலீட்டில் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது டிஎஸ்கே நிறுவனம். புதிய ஆலைக்கான இடம் குறித்து விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குல்கர்னி கூறுகையில்," அடுத்த 18 மாதங்களில் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும். மேலும், ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குக்கான பெரும்பான்மையான உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெற முடிவு செய்துள்ளோம்.

இதன்மூலம், இந்த பைக்கின் விலை கணிசமாக குறையும் என்பதால் போட்டியாளர்களை எளிதாக சமாளிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் பைக்குகளை விற்பனை செய்ய வழி பிறக்கும்," என்றார்.

புதிய ஆலை செயல்பாட்டு வந்தால், தற்போது ரூ.2.75 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஜிடி250ஆர் பைக் ரூ.1.5 லட்சமாக விலை குறையும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, June 15, 2012, 15:02 [IST]
English summary
Hyosung brand Indian partner DSK is planning to invest Rs 300 crore to set up a plant to localise the production of 250cc 'Hysoung GT250R', launched recently in India.
மேலும்... #hyosung #ஹயோசங்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+